என
பத்தாந்திருவாய்மொழி
- பா. 11 |
287 |
என்று பலகாலும் படைப்பவனாதலின்,
‘பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன்’ என்கிறார். மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்
ஆகையாலே, அவனுடைய குணவிஷயமாக மருள் இல்லாதவர் ஆதலின், ‘மருளில் சடகோபன்’ என்கிறார்.
‘பிரபந்தமோ?’
எனில், தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரம் - மருள் உண்டாய்க் கழிய வேண்டிற்று இவர்க்கு.
இவருடைய பிரபந்தத்தைக் கற்றார்க்கு முதலிலே அறிவின்மைதான் இல்லை. கேட்டார்க்குத் தெளிவைப்
பிறக்கும்படி அன்றோ அருளிச் செய்தது? தம்முடைய ஞானத்துக்கு அடி, சர்வேஸ்வரன்; இவர்களுடைய ஞானத்திற்கு
அடி, தாம் என்றபடி. ‘பிரபந்தந்தான் செய்வது என்?’ என்னில், அருளுடையவன் தாள் அணைவிக்கும்.
அருளையுடையவன் திருவடிகளிலே சேர்த்துவிடும். அருளைக் கொண்டே பரம்பொருளை நிரூபிக்கவேண்டி
இருத்தலின், 1‘அருளையுடையவன்’ என்கிறார். முடித்து - அது செய்யுமிடத்துச்
சம்சார சம்பந்தத்தை வாசனையோடே போக்கித் திருவடிகளிலே சேர்த்து விடும். ஒரு ஞானலாபத்தைப்
பண்ணித் தந்துவிடுதலே அன்றி, 2அர்த்தகிரியாகாரியாய் இருக்குமாதலின்,
‘முடித்தே’ என ஏகாரங் கொடுத்து ஓதுகின்றார்.
(11)
முதற்பாட்டில்,
‘திருமலையாழ்வாரைக் கடுக அடைமின்,’ என்றார்; இரண்டாம் பாட்டில், ‘திருமலையோடு சேர்ந்திருக்கின்ற
திருப்பதியை அடைமின்,’ என்கிறார்; மூன்றாம் பாட்டில், ‘அதனோடு சேர்ந்த அயன்மலை அமையும்,’
என்றார்; நான்காம் பாட்டில், 3‘திரிதந்தாகிலும்’ என்கிறபடியே ‘மீண்டும் திருமலையை
அடைமின் என்றார்; ஐந்தாம் பாட்டில், ‘அதனோடு சேர்ந்த புறமலையை அடைமின்’ என்றார்; ஆறாம்
பாட்டில், ‘திருமலைக்குப் போகும் வழியை நினைத்தலே அமையும்,’ என்றார்; ஏழாம் பாட்டில்,
‘அவ்வழியோடு சேர்ந்த திருமலையை அடைமின்,’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘நித்தியசூரிகளுக்குக்கூட
அடையத் தக்கது, ஆகையால், திருமலையே அடையத் தக்கனவற்றுள் உயர்ந்தது’ என்றார்; ஒன்பதாம்
பாட்டில், ‘திருமலையைத் தொழக்கடவோம்’ என்கிற துணிவே
________________________________________________________
1. ‘அருளுடைய பெருமாள்’ என்பது கள்ளழகர்க்கு
ஒரு திருநாமம்.
2. அர்த்தகிரியாகாரி - பிரார்த்திக்கப்படுகின்ற
பலனைக் கொடுக்கக் கூடியது.
3. கண்ணிநுண் சிறுத்தாம்பு, 3.
|