New Page 1
288 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
வேண்டுவது என்றார்; பத்தாம்
பாட்டில், ‘எல்லாப்படியாலும் திருமலையாழ்வாரை அடைதலே பேறு,’ என்று தலைக்காட்டினார்; முடிவில்
இது கற்றார்க்குப் பலம் அருளிச்செய்தார்.
முதல் திருவாய்மொழியாலே,
‘மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை’ என்கிறபடியே, ‘விலக்ஷண விஷயமாகையாலே பிரிந்தாரைக்
கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும்,’ என்றார்; இரண்டாந்திருவாய்மொழியாலே, ‘கூடினாலும் அதனைப்
போன்று மறப்பிக்கும்,’ என்றார்; மூன்றாந்திருவாய்மொழியால், ‘கூடிய பொருள் தான் நிரதிசய
சுகரூபம்,’ என்றார்; நான்காந்திருவாய் மொழியில், அவ்விஷயத்துக்குத் தேசிகரோடு அனுபவிக்கப்
பெறாமையாலே மோகத்தை அடைந்தார்; ஐந்தாந்திருவாய்மொழியால், தாம் ஆசைப்பட்டபடியே வந்து
கலந்தமை சொன்னார்; ஆறாந்திருவாய் மொழியால், தம் இழவுக்கும் அவன் ஐயங்கொள்ளும் என்றார்;
ஏழாந்திருவாய்மொழியால், தம்முடைய சம்பந்தி சம்பந்திகளையும் ஏற்றுக் கொண்டபடியைச்
சொன்னார்; எட்டாந்திருவாய்மொழியால் அவனுடைய மோக்ஷ பரதத்துவத்தை அருளிச்செய்தார்; ஒன்பதாந்திருவாய்மொழியால்,
பிராப்பிய நிஷ்கர்ஷம் பண்ணினார்; பத்தாந்திருவாய்மொழியால், அறுதியிட்ட பிராப்பியத்தைப்
பெறுகைக்குத் திருமலையாழ்வாரை அடையச் சொன்னார்.
திருவாய்மொழி நூற்றந்தாதி
கிளர்ஒளிசேர் கீழ்உரைத்த
பேறு கிடைக்க
வளர்ஒளிமால் சோலை
மலைக்கே - தளர்வறவே
நெஞ்சைவைத்துச்
சேரும்எனும் நீடுபுகழ் மாறன்தாள்
முன்செலுத்து வோம்எம்
முடி.
இரண்டாம் பத்து ஈட்டின்
தமிழாக்கம் முற்றிற்று.
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
வடக்குத் திருவீதிப்பிள்ளை
மலரடி வாழ்க!
நம்பிள்ளை நற்றாள்
வாழ்க!
மாறன் மலரடி வாழ்க!
|