|
New Page 1
போகத்திலே சேர்க்கை
உளதாம்படி பண்ணினான் ஆதலின்,
‘அருமை ஒழிய’
என்கிறார்,’ என்னலுமாம்.
அன்று - 1தூர்வாச சாபத்தாலே பீடிக்கப்பட்டு வருந்திய அக்காலத்தில். ஆர் அமுது
ஊட்டிய அப்பனை - 2வானவரைப் பெண்ணாகி அமுது ஊட்டும் பெருமான் அன்றோ? அப்பன் -
உபகாரகன். 3குழந்தைகட்குத் தாய் பண்ணும் உபகாரமாவது, அதன் முகம் வாடாமல் வளர்த்தலே
அன்றோ?
பெருமை - 4‘உதாரர்கள்’
என்கிறபடியே, தன்னையே பிரயோஜனமாகப் பற்றினார்க்குப் போலே, செல்வம் முதலியவற்றை
விரும்பியவர்கட்கும் ‘இதனையாகிலும் நம் பக்கல் கொள்ளப்பெற்றோமே! இவர்கள் நமக்குச் சர்வஸ்வதானம்
பண்ணுகிறார்கள் அன்றோ?’ என்று இருக்கும் பெருமை. 5நாட்டார் படி அல்ல இவனது: நாட்டில்
கொடுப்பார் உதாரராயிருப்பார்; இங்குக் கொள்வார் உதாரராயிருப்பார். யாதேனுமாகக் குறை தீர்ப்பார்
உதாரராமித்தனை அன்றோ? பிதற்ற வல்லாரை - 6‘அறவனை’ என்கிறபடியே, ‘வேறு பிரயோஜனங்களை
விரும்புகிறவர்களிடத்திலும் இப்படியிருப்பதே!’ என்று இதனை நெஞ்சிலே நினைத்து அடைவுகெடக் கூப்பிட்டு
ஏத்துமவர்களை. பிதற்றுமவர் கண்டீர் - ‘இந்நீர்மை 7இவர்களுக்கு நிலமாவதே!’ என்று
____________________________________________________
1. இச்சரிதப் பகுதியைக்
கம்பராமாயணம், பாலகாண்டம், அகலிகைப் படலம், 4
முதல் 26 முடிய உள்ள செய்யுள்களில் காணலாகும்.
2. ‘நண்ணாத
வாளவுண ரிடைப்புக்கு வானவரைப்
பெண்ணாகி அமுதூட்டும்
பெருமானார்’
என்பது
பெரிய திருமொழி, 2. 6
: 1.
3. ‘வேறு பலன்களைக்
கொடுப்பது உபகாரம் ஆகுமோ?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘குழந்தைகட்குத் தாய்’
என்று தொடங்கி.
4.
ஸ்ரீ கீதை, 7 : 18.
சர்வஸ்வ தானம்
- எல்லாவற்றையும் கொடுத்தல்.
5. ‘கொள்ளுகின்றவர்கள்
உதாரராம்படி என்?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘நாட்டார் படியல்ல’ என்று தொடங்கி,
‘கொள்ளுகின்றவர்களிடத்தில் கொடைத்தன்மை ஏது?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார்,
‘யாதேனுமாக’ என்று தொடங்கி. உதாரர் -
வள்ளல்.
6.
திருவாய்.
1. 7 : 1.
7. ‘இவர்களுக்கு’ என்றது,
வேறு பலன்களை விரும்புகிறவர்களைக் குறித்தபடி.
‘அவர்கள் அவன் பக்கலிலே இருக்கும் இருப்பை’
என்றது.
‘பிரயோஜநாந்தரபரர்க்கு அதனைக் கொடுத்துவிடுவதே; இது என்ன நீர்மை!’
என்று அநுசந்தித்துப்
பிதற்றுதலைக் குறித்தபடி. அவர்கள் - அடியார்கள்.
|