|
New Page 1
கைக்கு நடுவே பதின்கால்
பட்டைப் பொதிசோறு அவிழ்க்க வேண்டுங்காணும். எத்தனை காலம் புலம்புவனே - 1‘சாதனமாக
நினைத்துச் சொல்லமாட்டார், அடையத்தக்க பேறாக நினைத்துத் தவிரமாட்டார்; இதற்கு முடிவு என்?’
என்கிறார்.
(10)
310
புலம்புசீர்ப் பூமி
அளந்த பெருமானை
நலம்கொள்சீர்
நன்குரு கூர்ச்சட கோபன்சொல்
வலம்கொண்ட ஆயிரத்துள்
இவையும் ஓர்பத்து
இலங்குவான்
யாவரும் ஏறுவர் சொன்னாலே.
பொ-ரை : எல்லாரும்
கொண்டாடுகின்ற குணங்களையுடைய பூமியை அளந்த பெருமானை நன்மையைக் கொண்ட ஞானச் சிறப்பினையும்
நன்மையையுமுடைய திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபரால் அருளிச்செய்யப்பட்ட வலிமையையுடைய ஆயிரம்
பாசுரங்களுள் ஒப்பற்ற இப்பத்துப் பாசுரங்களையும் சொல்லுகின்றவர்கள் யாவரும் பேரொளி மயமான
பரமபதத்தை அடைவார்கள்.
வி-கு :
‘புலம்பு சீர்’ என்பது,
பெருமானுக்கு அடைமொழி. ‘நலங்கொள் சீர்ச் சடகோபன்’ என்க. அன்றி, குருகூர்க்கு அடையாக்கலுமாம்.
‘இவை ஓர் பத்தும் சொன்னால், சொல்லும் யாவரும் இலங்குவான் ஏறுவர்,’ எனக் கூட்டுக. இலங்கு
வான்: நிகழ்கால வினைத்தொகை. வான் - ஈண்டுப் பரமபதத்தைக் குறித்தது; இடவாகு பெயர்.
ஈடு :
நிகமத்தில், 2‘இத்திருவாய்மொழியில்
சொல் மாத்திரத்தாலே இதில் பிராத்தித்தபடியே அனுபவிக்கலான பரமபதத்தை அடையப் பெறுவர்,’
என்கிறார்.
புலம்பு சீர் -
இவர் புகழுமாறு போலே உலகம் அடையப் புகழும்படி ஆயிற்று அவன் குணங்கள். பூமி அளந்த பெருமானைச்
சொல் - பூமியை அளந்து, பிறருக்கு அடிமையாய் இருத்தல், தனக்குத்தானே உரியவனாய் இருத்தல் என்னும்
இவற்றைத் தவிர்த்த அறப்பெரியவனை ஆயிற்றுக் கவிபாடிற்று. நலம் கொள் சீர் நன்குருகூர்ச்
சடகோபன் சொல் - அனுபவிக்க வேண்டும்.
____________________________________________________
1. ‘ஏன் புலம்ப வேண்டும்?
சொல்ல ஒண்ணாதோ?’ எனின், ‘சாதனமாக
நினைத்துச் சொல்லமாட்டார்,’ என்கிறார்; ‘அங்ஙனமாயின்,
தவிர
வொண்ணாதோ?’ எனின், ‘அடையத்தக்க ... ... ... தவிரமாட்டார்’
என்கிறார்.
2. ‘இவையும் ஓர்
பத்துச் சொன்னால் யாவரும் இலங்கு வான் ஏறுவர்,’
என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|