|
செ
சொல்லுகிறேன். மணி
வண்ணன் - கொள்ளும் பயனும் இன்றியே செல்வமும் இன்றியே ஒழிந்தாலும் விட ஒண்ணாதபடி ஆயிற்று
வடிவழகு. உருவத்தின் தோற்றத்தைக் கண்டு மேல் விழா நின்றது அன்றோ புறம்பு? வடிவழகு கண்டு கவி
பாடினாலும் இவனையே பாட வேண்டும்; கைக்கூலி கொடுத்து விரும்பாநின்றது அன்றோ உருவத்தின் தோற்றங்களையும்?
மணி வண்ணன்தன்னைக் கவி சொல்ல வம்மின் - 2நான் சொல்லுகிற படியை உடையவனைக்
கவி பாட வாருங்கோள். ‘பிற்காலியாதே கடுகப் புகுரப் பாருங்கோள்’ என்பார், ‘வம்மின்’
என்கிறார்.
(5)
316
வம்மின் புலவீர்!நும்
மெய்வருத்திக் கைசெய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர்இப்
போதுஇல்லை நோக்கினோம்;
நும்இன் கவிகொண்டு
நும்நும்இட் டாதெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என்திரு
மாலுக்குச் சேருமே.
பொ-ரை : ‘புலவீர்!
வாருங்கோள்; உங்களுடைய சரீரத்தை வருத்திக் கைத்தொழில் செய்து உஜ்ஜீவியுங்கோள்; நிலை பெற்ற
இந்த உலகத்தில் செல்வமுடையார் இலர்; இப்போது நோக்கினோம்; உங்களுடைய இனிய கவிகளைக்கொண்டு
உங்கட்கு இஷ்டமான தெய்வத்தைத் துதித்தால், அக்கவிகள் மிகச்சிறந்த ஒளி பொருந்திய முடியையுடைய
என் திருமகள் கேள்வனுக்குச் சேரும்,’ என்கிறார்.
வி-கு :
முதலடியில், ஆழ்வார் அருளிச்செய்யும் உபாயம் ஊன்றிக் கவனித்தற்குரியது. மன் - நிலைபேறு.
வியாக்கியானம் காண்க.
ஈடு : ஆறாம்
பாட்டு. 3‘ஜீவனத்தின்பொருட்டு மனிதர்களைக் கவி பாடுகிறோம்’ என்ன, ‘புல்லரைக்
கவிபாடி வாழ்வதிலும் உடம்பு நோவப் பணி செய்து வாழ்தல் நன்று,’ என்கிறார்.
____________________________________________________
1. கொள்ளும் பயன்
இன்றியே ஒழிந்தாலும் விட ஒண்ணாதபடி ஆயிற்று
வடிவழகு; என்னை?’ எனின் ‘உருவத்தின் தோற்றத்தைக்
கண்டு மேல்
விழாநின்றதன்றோ புறம்பு?’ எனவும், ‘செல்வம் இன்றியே ஒழிந்தாலும்
விடவொண்ணாதபடி
ஆயிற்று வடிவழகு; ஆதலால், வடிவழகு கண்டு கவி
பாடினாலும் இவனையே பாட வேண்டும்; ‘என்னை?’ எனின்,
‘கைக்கூலி
கொடுத்து விரும்பாநின்றதன்றோ உருவத்தின் தோற்றங்களையும்?’ எனவும்
பிரித்துக்
கூட்டிச் சில சொற்பெய்து பொருள் காண்க.
2. ‘நான்
சொல்லுகிற படி’ என்பது, சிலேடை: திருமேனியும், பிரகாரமும்.
3. ‘நும் மெய்
வருத்திக் கைசெய்து உய்ம்மினோ’ என்றதனைக் கடாக்ஷித்து,
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|