பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
1

ஸ்ரீ

நான்காம் பத்து

முதல் திருவாய்மொழி - ‘ஒரு நாயகம்’

முன்னுரை

     ஈடு : முதற்பத்தால், 1பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்; இரண்டாம் பத்தால், அந்தக் கைங்கர்யத்தில் களை அறுத்தார்; மூன்றாம் பத்தால், களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கர்யமானது 2பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்; இப்படிப்பட்ட கைங்கர்யத்திற்கு விரோதிகள் ஐஸ்வர்ய 3கைவல்யங்கள் என்கிறார் இந்த நான்காம் பத்தால்.

      முதல் மூன்று பத்துகளாலும் 4துவயத்தில் பின் வாக்கியத்தின்

_____________________________________________________

1. பகவத் கைங்கர்யம் - பகவானுக்குச் செய்யும் தொண்டு. புருஷார்த்தம் -
  புருஷனாலே பிரார்த்தித்துப் பெறத்தக்கது; பேறு.

2. பாகவத சேஷத்வ பர்யந்தமான - அடியார்கட்கு அடிமையாய் இருத்தலை 
  எல்லையாக உடையதான.

3. கைவல்யம் - ஆத்தும அனுபவம்.

4. துவயம் - ஒரு மந்திரம்.

  ‘ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே!
  ஸ்ரீமதே நாராயணாய நம:’

  என்று இரண்டு வாக்கியமாய் அமைந்திருத்தலின், இது துவயம் எனப்  
  பெயர் பெற்றது. இதில் பின் வாக்கியம், ‘ஸ்ரீமதே நாராயணாய நம:’
  என்பது.‘பெரிய பிராட்டியாரோடு சேர்ந்திருக்கின்ற எல்லார்க்கும்
  இறைவனான நாராயணனுக்கு அடிமை செய்வேனாக வேண்டும்; அவ்
  வாறு செய்யும் அடிமையும் அவனுக்கேயாக வேண்டும்’ என்பது இதன்
  பொருள். இப்பொருளையே, மேல் மூன்று பத்துகளாலும் அருளிச்செய்தார்
  என்பதனைத் தெரிவிக்கின்றார்.