வ
வியாக்கியானத்தில் வந்துள்ள ஐதிஹ்யங்கள்
ஒருநாள் ஸ்ரீ வைஷ்ணவ
வண்ணாத்தான், திருப்பரிவட்டங்களை அழகியதாக வாட்டிக் கொண்டுவந்து எம்பெருமானார்க்குக் காட்ட,
மிக உவந்தாராய், அவனைப் பெருமாள் திருவடிகளிலே கைப்பிடித்துக்கொண்டு புக்கு, ‘நாயன்தே! இவன்
திருஅரைக்குத் தகுதியாம்படி வாட்டினபடி திருக்கண் சார்த்தியருளவேணும்,’ என்று இவற்றைக் காட்டியருள,
கண்டு உவந்தருளி, உடையவரை அருள்பாடு இட்டருளி, ‘இவனுக்காக, ரஜகன் நம் திறத்தில் செய்த குற்றம்
பொறுத்தோம்!’ என்று திருவுள்ளமாயருளினார்.
(பக். 93)
‘நம்மைப் போலே
வாய்புகுசோறாகப் பறிகொடாதே, பல காலம் பூமியிலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே ‘நாட்டாரோடு இயல்வொழிந்து’
என்கிறபடியே, தங்கள் வேறுபாடு தோன்ற இருக்கப் பெறுவர்கள்,’ என்று சீயர் உருத்தோறும்
அருளிச்செய்வர்.
(பக். 109)
நாதமுனிகள், இராஜா சாமந்தன்
தலையிலே அடியை இட்டு யானைக்கழுத்திலே புக்கபடியைக் கண்டு, ‘சர்வேசுவரன் பிரமன் முதலியோர்
தலையிலே அடியிட்டுப் பெரிய திருவடியை மேற்கொள்ளும்படி இதுவாகாதே!’ என்னாமோகித்தார் என்பது
பிரசித்தமே அன்றோ? இராஜா! தன் சேனையோடே கங்கை கொண்ட சோழபுரத்து ஏறப்போகச் செய்தே,
பெரிய முதலியார் மன்னனார் திருவடிகளிலே சேவித்திருக்கச்செய்தே, பெண்பிள்ளை வந்து, ‘நம்
அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்ணுமாய் வந்து புகுந்தார்கள்,’ என்றவாறே,
‘பெருமாளும் இளைய பெருமாளும் பிராட்டியும் ஐந்திரவியாகரண பண்டிதனும்’ என்று புத்தி பண்ணிப்
பின் தொடர்ந்து போய் முன்னே போகின்றவர்கள் ‘போகின்றார்கள், போகின்றார்கள்’ என்னக்
கேட்டுக் கீழை வாசலிலே சென்றவாறே, ‘இப்படிப் போகின்றவர்களைக் கண்டீர்களோ
|