என
என்று வாசலிலவர்களைக்
கேட்க, அவர்கள், ‘கண்டிலோம்’ என்ன, அதுவே ஹேதுவாகத் திருநாட்டிற்கு எழுந்தருளினார் அன்றோ?
(பக். 140)
இராஜேந்திர சோழன்
என்ற ஊரிலே திருவாய்க்குலத்தாழ்வார் என்ற ஒருவர் உண்டு; அவர் கார்காலத்தில் பயிர்
பார்க்க என்று புறப்பட்டு, மேகத்தைக் கண்டவாறே மோஹித்து விழுந்தார்; அவர் விழுந்ததைக் கண்டு
நின்ற குடிமகன் ஓடி வந்து, அவரை எடுத்துக்கொண்டு வந்து வீட்டிலே விட்டு, ‘இவர் தன்மை அறிந்திருந்தும்
இந்நாளிலே இவரை வயல் பார்க்கப் புறப்பட விடுவாருண்டோ!’ என்றான்.
(பக். 143)
ஆழ்வான் திருக்கண்கள்
நோவுபட்ட பின்பு எம்பெருமானார் திருவுள்ளம் நோவுபட்டாற்போலேகாணும் திருத்தாயார் திருவுள்ளமும்
படுகிறது.
(பக். 147)
‘ஸ்ரீ விபீஷணாழ்வானைப்
புகுரவொட்டேன்!’ என்றார் மஹாராஜர்; ‘இவன் புகுராவிடில் நாம் உளோமாகோம்’ என்கிறார்
பெருமாள்; இப்படி இருவரும் மாறுபடுதற்குக் கருத்து என்?’ என்று நஞ்சீயர் கேட்க,
‘இருவரும் சரணமாகப் பற்றினவர்களை விடோம் என்று மாறுபடுகிறார்கள் காணும்’ என்பது பட்டர்
அருளிச்செய்த வார்த்தை.
(பக். 186)
‘இராவணன் மாயா
சிரசைக் காட்டின போது பிராட்டியும் மற்றைப்பெண்களைப் போன்று சோகித்துக் கண்ணநீர் விழவிட்டாளாயிருந்தது;
இதற்கு அடி என்? இது கேட்ட போதே முடியவன்றோ தக்கது?’ என்று சீயரைக் கேட்க, ‘அவதாரத்தில்
மெய்ப்பட்டாலே ‘மெய்’ என்றே சோகித்தாள்; ஞானமின்றியிலே ஜீவிக்கைக்கு ஏது அவருடைய சத்தையாகையாலே
உளளாயிருந்தாள்; இவ்வர்த்தம் மெய்யாகில் சத்தையும் இல்லையாம்,’ என்று அருளிச்செய்தார்.
(பக்.204)
பிள்ளையுறங்காவில்லிதாசருடைய குடிமகன் ஒருவனுக்கு ஐயனார் ஏறி வலித்து நலிந்தவாறே ‘உனக்கு
வேண்டுவது என்?’ என்று கேட்க, எனக்குப் பாலும் பழமுமாக உண்ணவேணும்; சாந்தும் புழுகும் பூசவேணும்;
நல்ல புடைவை உடுக்க வேணும்; தண்டு ஏறவேணும்; அணுக்கன் இடவேணும்,’ என்ன, அவர்களும், ‘அப்படியே
|