New Page 1
மெலியும் நோய்
தீர்க்கும் - 1‘மெலியும்’
என்று தாயார் கைவாங்கினாள்; 2‘பெற்றார்
பெற்றொழிந்தார்’ என்கிற பாசுரப்படியே, பின்னையும் உடையவன் கைவிடானே? ஆதலின், ‘மெலியும்
நோய் தீர்க்கும்’ என்கிறது. நம் கண்ணன் -இப்படிப்பட்ட ஆபத்துகளிலே வந்து முகங்காட்டுவான்
என்னும் பிரமாண பிரசித்தியைப்பற்ற, ‘நம் கண்ணன்’ என்கிறது. 3‘கண்ணபிரான்
அந்தக் கோபஸ்திரீகளுக்கு மத்தியில் தோன்றினான்,’ என்பது ஸ்ரீபாகவதம். கண்ணன் கழல்கள்மேல்
- இப்படிச் சரீரம் மெலிவதற்கு அடியான விரக வியசனத்தைப் போக்கும் அடியார்கட்குச் சுலபனான
ஸ்ரீகிருஷ்ணன் திருவடிகள் விஷயமாக. மலி புகழ் - ‘தேச காலங்களால் கை கழிந்த அவன் படிகளையும்
இப்போதே பெற வேண்டும்’ என்று விடாய்க்கும்படி பகவத்விஷயத்திலே விடாய்க்கையால் வந்த
புகழே அன்றோ? ஆதலின், ‘மலிபுகழ்’ என்கிறது. வண் குருகூர்ச் சடகோபன் சொல் - இப்படிப்பட்ட
புகழையுடைய ஆழ்வார் அருளிச்செய்த. ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் - இப்படி இவரை விடாய்ப்பித்தவன்
அவ்விடாய் போன இடம் தெரியாதபடி நீக்க வல்லன் என்கிற கல்யாணகுணங்களை விளக்கமாகச்
சொல்லுகிற இந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள்.
_____________________________________________________
1. ‘மெலியும்’ என்ற
பின்னர், தாயார் வார்த்தை இல்லாமையாலே
கைவாங்கினமை சித்தம்.
2. பெரிய திருமொழி.
8. 9 : 7.
‘பெற்றார் பெற்றொழிந்தார்
பின்னும்நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்துஎன்
னுயிராகி நின்றானை
முற்றா மாமதிகோள்
விடுத்தானை எம்மானை
எத்தால் யான்மறக்கேன்?
இதுசொல்என் ஏழைநெஞ்சே!’
என்பது அத்திருப்பாசுரம்.
உடையவன் - சுவாமி.
3. ‘புன்முறுவலோடு
கூடின தாமரை போன்ற
திருமுகமண்டலத்தையுடையவனாயும் பீதாம்பரத்தைத் தரித்தவனாயும்
அணிந்த புஷ்பமாலையை
உடையவனாயும் மன்மதனுக்கும் மன்மதனாயும்
இருக்கிற கண்ணன் அந்தக் கோபஸ்திரீகளுக்கு மத்தியில்
வந்து
தோன்றினான்,’ என்பது ஸ்ரீ பாகவதம், 10.
|