பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
79

பூசல

பூசல் அல்லது அறியார்; ஆதலின், ‘சிலை குனித்தாய்’ என்கிறார். 1 ‘நீர் தரும யுத்தத்தில் ஆற்றல் உள்ளவராய் இருத்தல் போன்று, இராக்கதர்கள் மாயப்போர் செய்வதில் ஆற்றல் உள்ளவர்கள் கண்டீர்,’ என்று ஸ்ரீ விபீஷணாழ்வானைப் போன்று அறிவிக்கப் பெற்றிலேன். குலம் நல்யானை மருப்பு ஒசித்தாய் -2ஆகரத்திலே பிறந்து எல்லா இலக்கணங்களையுமுடைய குவலயாபீடத்தினுடைய கொம்பை வருத்தம் என்பது சிறிதும் இன்றி முரித்தவனே! அவ்வளவிலே ஸ்ரீமதுரையில் உள்ள பெண்களைப் போல நின்று, 3 ‘தரையில் உள்ள இராமனுக்கும் தேரில் உள்ள இராக்கதனுக்கும் போர் ஏற்றது அன்று,’ என்று சொல்லப் பெற்றிலேன்.

    பூவை வீயா நீர் தூவி - ‘மலர்களைத் திருவடிகளிலே பணிமாறி நீரைத் தூவி’ என்னுதல்; அன்றிக்கே, ‘மலரை ஒழியாத நீர் - மலரோடே கூடின நீர்; அதனைத் தூவி’ என்னுதல். போதால் வணங்கேனேலும் - அந்த அந்தக் காலத்திலே பூவை வீயா நீர் தூவி வணங்கிற்றிலேன் ஆகிலும். என்றது, ‘எருது ஏழ் அடர்த்தல் தொடக்கமான காலங்களிலே பிறந்த சிரமம் மாற, குளிர்ந்த உபசாரம் பண்ணிற்றிலேன் ஆகிலும்’ என்றபடி. பூவை வீயாம் நின் மேனிக்கு -பூவால் அல்லது செல்லாத நின் திருமேனிக்கு. அன்றிக்கே, ‘பூவைப்பூவோடு ஒத்த திருமேனி’ என்னுதல். என்றது, ‘மலர்ந்த மலரைப்போன்ற மிருதுத்தன்மையையுடைய திருமேனிக்கு’ என்றபடி. வீ என்பது பூவுக்குப் பேர். மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே -

_____________________________________________________

1. இந்நிலையிலே இவர் குளிர்ந்த உபசாரம் செய்யும்படியைத் திருஷ்டாந்த
  மூலமாக அருளிச்செய்கிறார், ‘நீர் தருமயுத்தத்தில்’ என்று தொடங்கி.

2. ஆகரம் - பிறக்குமிடம்.

3. ஸ்ரீ ராமா. யுத்தகாண்டம்.  

4. ஸ்ரீவிஷ்ணு புரா. 5 : இச்சுலோகத்திற்கு வியாக்கியாதா எழுதியிருக்கும்
  விரிவுரை மிகமிகப் பாராட்டற்குரியது!

  ‘சுகந்தமேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிராநநே
  ஆவயோ : காத்ர சத்ருசம் தீயதா மநுலேபநம்.’

  ‘செயற்கை வாசனையையுடைய இந்தச் சந்தனமானது அரசர்க்கு உரியது.
  எங்கள் இருவருடைய சரீரங்கட்கும் தகுந்ததான சந்தனத்தைக் கொடுப்பாய்,’
  என்பன அந்தச் சுலோகமும் அதன் பொழிப்புரையுமாகும்.