பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
68

சங

சங்கை பண்ணுதல், ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் சஜாதீய புத்தி பண்ணுதல், பாகவதரல்லாதாருடைய சகவாசம் நன்று என்று இருத்தல், வேறு பிரயோஜனங்களை விரும்புதல் ஆகிற மானச தோஷங்களைப் போக்கும்.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

 பொலிக பொலிக என்று பூமகள்கோன் தொண்டர்
        மலிவுதனைக் கண்டுகந்து வாழ்த்தி - உலகில்
        திருந்தாதார் தம்மைத் திருத்திய மாறன்சொல்
        மருந்தாகப் போகுமன மாசு.

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

_____________________________________________________

      “கறுத்த மனம் வேண்டா” என்றதனால், பிரணவத்தின் அர்த்தமான
   அநந்யார்ஹ சேஷத்வத்தையும், அவர்களை, “சென்று தொழுது உய்ம்மின்”
   என்றதனால், நம:(ச்) சப்தார்த்தமான ததீய சேஷத்வத்தையும், “சிந்தையைச்
   செந்நிறுத்தி” என்றதனால், நாராயண பத சித்தமான ஐச்வர்ய கைவல்ய
   வியாவிருத்தமான புருஷார்த்தத்தையும் சொல்லுகையாலே, ‘மாசு அறுக்கும்’
   என்ற இடத்தில், மூன்று பதங்களின் பொருள்களும் சொல்லப்படுகின்றன
   என்பர் பெரியோர்.