பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
332

மனைக்கு வலியபழியும் நினைக்கின்றிலள். 1விருப்பத்தைப் பெறுதற்குச் சாதனம் அல்லாத அளவே அன்று, விரோதி என்றிருக்கிறாள். 1‘இத் தலையாலே செல்லுமது பழி’ என்றே இருந்தபடி பாரீர்.

    2
அதபாதக பீதஸ்த்வம் ஸர்வ பாவேந பாரத - 3அடுத்து அடுத்து இராஜசூயமே செய்து போந்தவனுக்கு ஒரு தடவற் பொய்க்காக நரக தரிசனம் பண்ணுமளவாய் நின்றவனை யன்றோ இப்படி உபதேசிக்கிறது. 4நல்வினைகளோடு தீவினைகளோடு வாசி அற விரோதியாய், கிருஷ்ணனே பற்றுக்கோடு என்னுமிடத்தைத் தோற்றுவிக்கிறது. விமுக்தாந்யஸமாரம்ப: - அசேதனமான கர்மங்களைப் பற்றிக்கொண்டு நாலாதேகொள். நாராயணபரோ பவ - உனக்கு வகுத்தவன் தன்னையே பற்றப்பார். செல்ல வைத்தனள் - 5போதலில் நெஞ்சினை வைத்தாள் என்னுதல்; நாம் எல்லாம் காண அங்கே ஆனாள் என்னுதல். அதாவது, தான் அங்கே செல்ல ஒருப்

 

1. “பழியும்” என்ற உம்மைக்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘விருப்பத்தை’
  என்று தொடங்கி. வியாக்யாதாவின் ஈடுபாடு: ‘இத்தலையாலே’ என்று
  தொடங்கும் வாக்கியம்.

2. தான்செய்யும் முயற்சி சொரூபத்திற்கு விரோதம் என்பதற்குப்
  பிரமாணமும், பிரமாணத்திற்குப் பொருளும் அருளிச்செய்கிறார்
  ‘அதபாதக’ என்று தொடங்கி.

  “அதபாதகபீத: த்வம் ஸர்வபாவேந பாரத
   விமுக்தாந்ய ஸமாரம்ப: நாராயணபரோ பவ”

  என்பது, பாரதம். இது, தருமபுத்திரனைப் பார்த்துத் தர்மதேவதை கூறியது.

3. “பாதகம்” என்ற சொல், தள்ளத்தக்கது என்ற பொருளைக் காட்டுமே
  ஒழிய, வேறு உபாயங்களைச் சொல்லுமோ? என்ன, இங்கு, “பாதகம்” என்ற
  சொல், தன்முயற்சியால் செய்யப்படுகின்ற உபாயாந்தரங்களையே
  சொல்லுகிறது; தள்ளத்தக்க காரியங்களைச் சொல்லவில்லை என்று
  கூறுவதற்குத் திருவுள்ளம்பற்றி அதற்கு உபபத்தி காட்டுகிறார் ‘அடுத்து
  அடுத்து’ என்று தொடங்கி. தடவற்பொய் - ஆபாசமான பொய்.

4. ஆயின், ‘புண்யபீதோத’ என்னாமல், “பாதக பீத:” என்பான் என்? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘நல்வினைகளோடு’ என்று தொடங்கி.

  இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
  பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

  என்றார் தெய்வப்புலமைத் திருவள்ளுவனார்.

5. தான் அங்கே போகையிலே தன் நெஞ்சினை வைத்தாள் என்னுதல்; நாம்
  அங்கே செல்லும்படி தன் நெஞ்சினை வைத்தாள் என்னுதல்.
  முதற்பொருளில், நெடுங்கண் இளமான் இனிப்போய், மனைக்கு வான்
  பழியும் நினையாதவளாய்க்கொண்டு, அனைத்துலகுமுடைய
  அரவிந்தலோசனனைத் தினைத்தனையும் விடாதே இருக்கவேண்டும்
  என்று அவன்சேர் திருக்கோளூர்க்கே செல்ல ஒருப்பாட்டாள்;
  தெய்வங்காள்! நினைக்கிலேன்