பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

திருவாய்மொழி

ஏழாம் பத்து

முதல் திருவாய்மொழி - ‘உண்ணிலாவிய’

முன்னுரை

 

    ஈடு : முதற்பத்தால், பகவத் கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்; இரண்டாம் பத்தால். அந்தக் கைங்கரியத்தில் களையறுத்தார்; மூன்றாம் பத்தால், களையறுக்கப்பட்ட அந்தக் கைங்கரியமானது பாகவத சேஷத்துவ பரியந்தமான பகவத்கைங்கரியம் என்றார்; நான்காம் பத்தால், இப்படிப்பட்ட கைங்கரியத்திற்கு விரோதிகள் ஜஸ்வரிய கைவல்யங்கள் என்றார்; ஐந்தாம் பத்தால், அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்; ஆறாம் பத்தால், விரோதிகளை அழிக்கும் இயல்பினனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார்; இப்படிப் பெரிய பிராட்டியார் முன்னிலையாகச் சரணம் புக்கவிடத்திலும், 1தக்தப்பட நியாயம்போலே சம்சாரம் தொடருகிறபடியைக் கண்டு நோவுபடுகிறார் இந்த ஏழாம் பத்தால்.

_________________________________________________________________________

1. தக்தபடம் - எரிந்துபோன வஸ்திரம். ‘மடிப் புடைவை வெந்தால் உண்டையும்
  பாவும் ஒத்துக்கிடந்கும்: காற்று அடித்தவாறே பறந்துபோம்’என்பது, ஸ்ரீ வசனபூஷணம்,
  2-ஆம் பிரகரணம், சூ. 191.