பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஏழாந்திருவாய்மொழி - பா. 3

297

    வி - கு : ‘அம்மான் தொண்டைவாய் கனிகொல்? வினைகொல்? கொழுந்துண்டங்கொலோ? அறியேன்; திசையுள் எல்லாம் வந்து தோன்றும்’ என்க.

    ஈடு :
மூன்றாம் பாட்டு. 1அது தன் மூக்கு வலி காட்ட நாம் பேசாதே இருந்தால், ‘அத்தனையோ இதன் வாய் வலி’ என்று நம்மை ஏசுவர்கள் என்று திருப்பவளத்தின் அழகு வந்து நலிகிறபடியை அருளிச்செய்கிறார்.

    வாலியது ஓர் கனிகொல் - 2முன்பு பிஞ்சாய், பின்பு பக்குவமாய், பின்பு அனுபவயோக்கியம் அன்றிக்கே போவன சில பழங்கள் உளவே அன்றோ? அங்ஙன் அன்றிக்கே, என்றும் ஒக்க ஒரே தன்மையாய் இருப்பது ஒருகனியோ? 3அத்தலையில் இனிமை போது செய்யாமையாலே இத்தலையில் ஆற்றாமையும் போது செய்யாதே! வினையாட்டியேன் வல்வினைகொல் - 4இனிய பொருள் தீயது ஆயிற்று. அனுபவிக்கின்ற வர்கள் செய்த பாபத்தாலே அன்றோ? அமிருதமே விஷமாம்படியான பாவத்தைச் செய்தேன். 5பாவத்தைச்

____________________________________________________________________

1. ‘தொண்டைவாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி ரசோக்தியாக அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. ‘வாலியதோர் கனி’ என்பதற்கு, ஒரே தன்மையதாய் இருக்கும் கனி’ என்பது
  பொருள். அதனை எதிர்த்தட்டாக விவரணம் செய்கிறார் ‘முன்பு’ என்று
  தொடங்கி. வாலியது-வலியது. வன்மையாவது, நிலைத்திருக்கும் தன்மையது,
  என்றது, ‘ஒரே தன்மையானது’ என்றபடி. சில பழங்கள்-எட்டிப்பழம் முதலானவை.

3. மனோபாவத்தை அருளிச்செய்கிறார், ‘அத்தலையில்’ என்று தொடங்கி. போது
  செய்கை-குவிதல்.

4. ‘வல்வினை’ என்கைக்குக் காரணம் யாது?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘இனிய பொருள்’ என்று தொடங்கி. அதனை விவரணம்
  செய்கிறார், ‘அமிருதமே’ என்று தொடங்கி.

        ‘கொஞ்சுகிளி அன்னமொழி குமுதஇதழ் அமுதால்
        எஞ்சினன் நராதிபதி ஈதொரு வியப்போ!
        அஞ்சுதரு தீவினையின் ஆரமுதும் நஞ்சாம்;
        நஞ்சும்அமு தாம்உரிய நல்வினையின் மாதோ,’

என்பது, வில்லி பாரதம்.

5. பதப்பொருள் அருளிச்செய்கிறார், ‘பாவத்தை’ என்று தொடங்கி. ‘பலத்தைக்
  கொடுப்பதாய்க்கொண்டு குடி ஏறிற்றோ?’ என்றது, ‘அவனிடத்தில் அதரமாகத்
  திரண்டதோ?’ என்றபடி.