பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

430

திருவாய்மொழி - ஏழாம் பத்து

    ‘ஆயிரக் காதம் பறப்பதன் குட்டி ஐந்நூற்றுக் காதம் சிறகடிக் கொள்ளும்’ என்னுமாறு போலே. பக். 162.

    தூசி ஏறினவர்கள் பொரப் புக்கவாறே நின்ற இளவணி கலங்கி மேலே நடக்குமாறு போலே. பக். 164.

    நின்ற பேரணியும் குலைந்து மேல் விழுமாறு போலே. பக். 166.

    கிடாய்ப்பாய்ச்சல் போலே. பக். 169.

    பசளைக்கலம் நெறித்தாற்போலே. பக். 175.

    புருடோத்தமனைப் பற்றி இருப்பாரைப் போலே. பக். 182.

    ‘கழுத்திலே கயிறு இட்ட பின்புகாண் நான் பூனை என்று அறிந்தேன்,’ என்பாரைப் போலே. பக். 184.

    நிறைக்குடத்தைக் கவிழப் பிடித்தாற்போலே. பக். 186.

    முற்றத்திலே பொற்குவியல் குவிந்து கிடக்க, அதனை அறியாதே, மேலே சஞ்சரித்துப் புறங்கால் வீங்குவாரைப்போலே. பக். 190.

    வெள்ளமானது தாழ்ந்த இடத்திலே ஓடுமாறு போலே. பக். 200.

    அரசன் தன்னுடையான் ஒருவனுக்கு ஒரு நாட்டைக்கொடுத்தால் அவனுடைய ஆணையம் ஆஜ்ஞையுமாக அவனுடைய சுவாந்திரயமே நடக்கும்படி செய்து கொடுக்குமாறு போலே. பக். 204.

    ‘ஒருவன் சோற்றை உண்டவர்கள் அவனை ஒழிய வேறு ஒருவர்க்குக் காரியம் செய்வார்களோ?’ என்னுமாறு போலே. பக். 207.

    எறும்பு வளையைப் போன்றது. பக். 215.

    ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் வேறு குணங்களில் கால் வாங்கமாட்டாதவாறு போலே. பக். 217.

    பயிர் செய்கிறவன் விளைநிலம் உவர் கழியும்படி நீரைத்தேக்கி வைக்குமாறு போலே. பக். 224.

    உதாரராய் இருப்பார், நாற்பது பேருக்குச் சோறிட நினைத்து, நூறு பேருக்குச் சோறு சமைக்குமாறு போலே. 227.

   
பரணி கூடு வரிந்தாற்போலே. பக். 242.