ய
98 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
யாய் இருக்கையாலே உய்ந்தவன்
என்கிறத். மொய்புனல் பொருநல் துகில் வண்ணம் தூநீர்ச் சேர்ப்பன் - வலியையுடைத்தான தண்ணீரோடு
கூடின தாமிரபரணியில் துகிலினுடைய வண்ணத்தையுடைத்தான தூநீர்த் துறைவன். ‘மொய்’ என்பதற்கு;
‘மிகுதி’ என்பதும், ‘வலி’ என்பதும் பொருளாம். இங்கே, நீரோட்டத்தால் வந்த வலியை நினைக்கிறது.
சேர்ப்பன் - துறைவன்: நெய்தல் நிலத்தின் தலைமகன். ‘மொய்ப்புனல்’ என்னாநிற்கவும்,
‘தூநீர்’என்கிறது, பெருவெள்ளமாய் இருக்கச்செய்தே தெளிந்திருக்கும் படியைப்பற்ற. 1‘அழுக்கு
அற்ற, தெளிந்த நீரையுடைய, அழகிய, பெரியோர்களுடைய மனம் போன்ற இந்தத் தீர்த்தத்தைப்
பாரும்,’ என்கிறபடியே.
வண் பொழில் சூழ்
வண் குருகூர் சடகோபன் - காண்பதற்கு இனியதான பொழிலையுடைத்தாய் வண்மையையுடைய திருநகரிக்குநாதன்.
முகில் வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார் - காளமேகம் போன்று
மிக்க பேரெழிலையுடையரான பெரிய பெருமாள் விஷயமாக அருளிச்செய்த சொற்களையுடைய மாலை ஆயிரத்து
இப்பத்தையும் கருத்தோடு கற்க வல்லவர்கள். ‘பெரிய பெருமாள் திருவடிகளிலே, திருவாய்மொழி ஆயிரமும்
சொல்லிற்று; 2‘திருமோகூர்க்கு ஈத்து பத்து’. ‘திருவேங்கடத்துக்கு இவை பத்து’ என்று
பிரித்துக்கொடுத்த இத்தனை; பெருமாள் திருப்பலகையில் அழுதுபடியிலே மற்றைத் திருப்பதிகள்
நாயன்மார்கட்கும் அளந்து கொடுக்குமாறு போலே’
___________________________________________________________________
1. தெளிந்திருப்பதற்குப்
பிரமாணம் காட்டுகிறார், ‘அழுக்கு அற்ற’ என்று தொடங்கி.
‘ரமணீயம் ப்ரஸந்நாம்பு
ஸந்மநுஷ்ய மநோ யதா’
என்பது, ஸ்ரீராமா. பால. 2:5.
‘சவியுறத்தெளிந்து தண்ணென்று
ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவியெனக் கிடந்த கோதா
விரியினை வீரர் கண்டார்’
என்பது, கம்பராமாயணம், சூர்ப்பணகைப்
படலம், 1. 9
2. ‘ஆயிரமும்
பெரிய பெருமாள் விஷயமானால், திருவேங்கடமுடையான்
முதலாயினார்க்கு இன்றிக்கே போமே?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘திருமோகூர்க்கு’ என்று தொடங்கி. ‘திருமோகூர்க்கு’ என்பது,
திருவாய். 10.1:11
‘திருவேங்கடத்துக்கு’ என்பது திருவாய். 6.10:11.
|