15. திருச்சேறை பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா என்றும் மைவிரியும் மணிவரைபோல் மாயவனே என்றென்றும், வண்டார் நீலம் செய்விரியும் தண்சேறை யெம் பெருமான் திருவடியைச் சிந்தித் தேற்கு, என் ஐ யறிவும் கொண்டானுக் காளாணார்க் காளாமென் அன்பு தானே (1584) பெரியதிருமொழி 7-4-7 | என்று பாற்கடலுள் பள்ளி கொண்ட பண்பினையும், கருமேக நிறமொத்து நீண்ட மலைபோல் தோற்றமும் கொண்டு விரிந்திருக்கும் நீல மலர்களைச் சுற்றி எந்நேரமும் வண்டுகள் இசைபாடும் குளிர்ச்சி பொருந்திய திருச்சேறையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானைச் சிந்தித்தவர்கட்கு என் அன்பு ஆட்படுகின்றது, என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்திருத்தலம் இன்றும் திருச்சேறை என்ற தூயதமிழ்ப் பெயரிலேயே வழங்கி வருகிறது. நாச்சியார் கோவில் திவ்ய ஸ்தலத்திலிருந்து குடவாசல் செல்லும் வழியில் 3வது மைலில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து குடவாசல் வழியாகத் திருவாரூர் செல்லும் எல்லாப் பேருந்துகளும், நாச்சியார் கோவில் என்னும் திருநறையூர், திருச்சேறை, திருக்கண்ணமங்கை ஆகிய மூன்று திவ்ய தேசங்களைத் தாண்டித்தான் செல்கிறது. வரலாறு. இத்தலத்தைப் பற்றி பிர்ம்மாண்ட புராணத்தில் மகேஷ்வர நாரத் ஸம்வாதத்தில் 1 முதல் 6 அத்தியாயம் வரையிலும் பவிஷ்ய புராணத்தில் 68 முதல் 72 வரை உள்ள அத்தியாயங்களிலும் பேசப்படுகிறது. முன்பு ஒரு பிரளயத்தின்போது பிரம்மா சிறிது மண் எடுத்து ஒரு கடம் பண்ணி அதில் சகல வேதங்களையும் மறைத்து வைத்துக் காப்பாற்ற எண்ணி பல இடத்தில் மண் எடுத்துப் பானை செய்யவும், எல்லாம் உடைந்து போக இறுதியில் வழக்கம்போல் மஹாவிஷ்ணுவைத் துதி செய்ய, அவர் வழக்கம் போல் பல | |
|
|