பக்கம் எண் :

155

     இந்த வெண்ணாற்றங்கரையில் இப்போது மூன்று கோவில்கள் உள்ளன.
இந்த மூன்று தலங்களிலும் மூன்று பெருமான்கள் எழுந்தருளியுள்ளனர்.
மூன்று தலங்கள் இருந்தாலும் இரு திவ்யதேசமாகவே மங்களா சாசனம்
செய்யப்பட்டுள்ளது. இம்மூன்றும் சுமார் ஒரு பர்லாங் சுற்றளவிற்குள்ளேயே
அமைந்துள்ளது.

1. தஞ்சை மாமணிக் கோயில்

மூலவர்

     நீலமேகப் பெருமாள், கிழக்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலம்

தாயார்

     செங்கமலவல்லி

தீர்த்தம்

     கன்னிகா புஷ்கரணி, வெண்ணாறு

விமானம்

     சௌந்தாய விமானம்

காட்சி கண்டவர்கள்

     பராசர முனி

2. மணிக்குன்றம்

மூலவர்

     மணிக்குன்றப் பெருமாள், கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்

தாயார்

     அம்புச வல்லி

தீர்த்தம்

     ஸ்ரீராம தீர்த்தம்

விமானம்

     மணிக்கூட விமானம்

காட்சி கண்டவர்கள்

     மார்க்கண்டேயர்