| 	      4) பிரம்மாதி தேவர்களால் தவஞ்செய்து உண்டாக்கப்பட்டவைகளை     ‘தைவம்’ என்பர்.                5) மன்னர்களாலும், அடியார்களாலும் பிரதிட்டை செய்யப்     பட்டவைகளுக்கு  ‘மானவம்’  என்பர்.                6) ஆச்சார்ய புருஷர்களால் அபிமானிக்கப் பட்டதை அபிமான          ‘ஸ்தலம்’ என்பர்.                இத்தகைய அமைப்பிலோ, அல்லது இதில் குறிப்பிடாதவாறு வேறு     வகையில் கட்டப்பட்ட ஸ்தலத்திற்கு ஆழ்வார்களின் பாசுரஞ்     சூட்டப்பட்டதாகில் அப்பெருமாள் மங்களாசாசனம் செய்யப்பட்டவராக     ஆகிறார். அத்தலம் திவ்யதேசமாகிறது. அங்கு எம்பெருமான் நித்ய வாசஞ்     செய்கிறான். இந்த ஸ்தலங்கள் கிளிகொத்திய மாங்கனியாகத்     திகழ்பவைகளாகும்.                எம்பெருமானின் அம்சங்களே ஆழ்வாராக அவதரித்தார்கள். அதாவது     எம்பெருமானின் சார்ங்கம் என்னும் வில்லே ஒரு ஆழ்வாராக அவதாரம்.     பிராட்டியே ஸ்ரீ ஆண்டாளாக அவதாரம் செய்தார். இவ்விதம்      எம்பெருமானின் அம்சங்களே ஆழ்வாராக வந்து மங்களாசாசனம் செய்ததால்     அத்தலம் திவ்ய தேசமாயிற்று.                திவ்யம் என்ற வடசொல்லுக்கு தெய்வத்தன்மை பொலிந்தது என்று     பொருள். ஆழ்வார்களின் பாசுரங்கள் பெறப்பட்ட ஸ்தலங்களில்      எம்பெருமான் நித்ய ஸான்னித்தியம் கொண்டுள்ளான். அதாவது அங்கேயே     வாழ்கிறான் என்று பொருள்.                திவ்யமான மங்கள அர்ச்சா ரூபம், திவ்ய பிரபந்தமென்னும்     மங்களாசாசனமாகிய பாமாலையால் கட்டுண்டு திவ்விய தேசமாக ஆகி     நம்மையும் (பரமபதத்தில்) வைக்கும்படியான நித்ய சூரியாக ஆக்குகிறது.                பரமபதத்திலிருந்து வரப்பெற்ற திவ்ய சூரிகளால் அவர்களது திவ்யம்     பொருந்திய மொழிகளால் மங்களாசாசனம் செய்யப்பட்டவை திவ்ய     ஸ்தலங்களாகும்.                அணுவிற்குள் அண்டமும், அண்டத்திற்குள் அணுவும் இருப்பதைப்     போன்று திவ்ய சூரியே இங்கு வந்து திவ்ய தேசங்களைக் காட்டிச்      செல்கிறான். அந்த திவ்யதேசங்களில் ஈடுபட்டே ஒருவன் திவ்ய     சூரியாகிவிடுகிறான்.                நாராயண மந்திரம் மூன்று பதங்களாயிருப்பதைப் போல இந்த     ஸ்தலங்களை (திவ்ய தேசங்கள் என்று சொல்லப்படும் ஸ்தலங்களை) மூன்று     திவ்யங்கள் சூழ்ந்துள்ளன. அதாவது  	 |