31. திருச்செம்பொன்செய் கோவில் (திருநாங்கூர்)
பிறப்பொடு மூப்பொன்றில்லவன் றன்னைப் பேதியா வின்ப வெள்ளத்தை இறப்பெதிர் காலக் கழிவு மானானை ஏழிசையில் சுவை தன்னை சிறப்புடை மறையோர் நாங்கை, நன்னடுவுள் செம்பொன் செய், கோயிலுளுள்ளே மறைப்பெரும் பொருளை, வானவர் கோனை கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே - (1269) - பெரிய திருமொழி 4-3-2 |
என்று திருமங்கையாழ்வாரால் பாசுரஞ் சூட்டப்பட்ட இத்திருத்தலம்
திருநாங்கூரின் மத்தியில் அமைந்துள்ளது.
வரலாறு
இராவண சம்ஹாரம் முடிந்தபின் இராமபிரான் இந்த தலத்தில் இருந்த
த்ருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி அவர் கூறியவாறு
தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர்
அப்பசுவை ஒரு பிராம்மணர்க்குத் தானம் செய்தார். அதைக் கொண்டு இந்தக்
கோவிலை (அப்பிராம்மணர் தற்போதுள்ளவாறு) கட்டியபடியால் இதற்கு
செம்பொன்செய் கோவில் என்று பெயர் வந்ததாயும் கூறுவர்.
மூலவர்
செம்பொன்ரங்கர்
தாயார்
அல்லிமாமலர் நாச்சியார்
தீர்த்தம்
ஹேம புஷ்கரணி, கனக தீர்த்தம்
விமானம்
கனக விமானம்
காட்சி கண்டவர்கள்
ருத்ரன்