பக்கம் எண் :

25

     1. ஸ்தாபனா - திருமாலை நின்ற திருக்கோலத்தில்
                 அமைத்து தொழுவது

     2. அஸ்தாபனா - அமர்ந்த திருக்கோலத்தில்
                    அமைப்பது

     3. ஸமஸ்தாபனா - பள்ளி கொண்ட திருத்தலத்தில்

     4. பரஸ்தாபனா - வாகனங்களில் பற்பல ரூபங்களில்
                   அமைப்பது.
     5. பிரதிஷ்டானா - சன்மார்ச்சையுடன் அமைப்பது.

     இவ்வகைத் திருக்கோலங்களில் ஆலயங்களில் அமைக்கப்படும்.
திருமால், யோகம், போகம், வீரம், ஆபிசாரிகம் என நால்வகைப்படுவர்.
யோகிகள் யோக மூர்த்திகளையும், குடும்பத்தில் உள்ளவர்கள் போக
மூர்த்திகளையும், வீரர்கள் வீர மூர்த்திகளையும், பகைவர்கட்குத் துன்பம்
விழைவிக்க விரும்புவர்கள் ஆபிசாரிக மூர்த்திகளையும் வணங்குவர். இன்று
போக, யோக மூர்த்திகளே பழக்கத்தில் அமைந்துள்ளன. வீர மூர்த்திகள் மிக
அரிது. ஆபிசாரிக மூர்த்திகள் இன்று இல்லவே இல்லை. இதனை
வேண்டும்போது அமைத்து அழித்து விடுவதுண்டு.

     108 திவ்ய தேசங்களில் நின்ற திருக்கோலத்தில் எம்பெருமான்
எழுந்தருளியுள்ள தலங்களின் எண்ணிக்கையே அதிகமாகும். நின்றது 67

     இதில்,

     கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்        39
     மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்        12
     தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்        14
     வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்        2

     இதேபோல் அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள ஸ்தலங்களில்
எண்ணிக்கை 17.

     இதில்

     கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்     13
     மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்      3
     தெற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் இல்லை
     வடக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்     1
     இதேபோல் சயனத்திருக்கோல ஸ்தலங்கள்  24