பக்கம் எண் :

323

தாயார்

     பத்மாமணி, நாச்சியார், ராமா மணி நாச்சியார்

தீர்த்தம்

     அக்ராய தீர்த்தம்

விமானம்

     வாமன விமானம், ரம்ய விமானம்

காட்சி கண்டவர்கள்

     கார்ஹ மஹரிஷி

சிறப்புக்கள்

     1. உலகளந்த பெருமாள் சன்னதியில் மூன்றாவது பிரகாரத்தில் ரம்ய
விமானத்தில் கீழ், வடக்கு நோக்கி ஆதி சேடன் மீது அமர்ந்த
திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

     2. திருமங்கையாழ்வாரால் மட்டும் உலகமேத்தும் காரகத்தாய் என்று
சொற்றொடர் மங்களாசாசனம்

     3. இப்பெருமாள் கல்வியும் அறிவும் அளவின்றி வளர அருள்
பொழிபவர். எனவேதான் பிள்ளைப் பெருமாளையங்கார் தமது 108
திருப்பதியந்தாதியில்,
 

     ஓராதார் கல்வியுடையேம் குலமுடையேம்
          ஆராதனம் உடையேம் யாமென்று - சீராயன்
     பூங்காரகங் கானப் போதுவார் தாள் தலைமேல்
          தாங்கா ரகங்காரத் தால்

     நற்கல்வியும் நற்குலமும் நற்புகழும், உடையவர்கள் அவைகள் மேலும்
பெருக வேண்டுமென எண்ணி காரகம் சென்று வணங்குவர். அவர்களின்
திருப்பாதங்களே என் தலைக்கு அலங்காரமாகு மென்று அளவிறந்த
அறிவாற்றல் படைத்த அவனடியார்களின் ஏற்றத்தை இப்பாவில்
தெளிவாக்குகிறார்.

4. வைணவ அடியார்கள்,

     அவனை அறிதலையே பெரிய கல்வியாகவும், அவனுக்கு தொண்டு
செய்துய்யும் குலத்தில் பிறப்பதே நற்குலமென்றும் அவனதடியார்களைப்
போற்றி ஆராதித்து அன்பு செலுத்திப் பணிவிடை செய்தலையே