பக்கம் எண் :

341

     ஒரு சமயம் பரத்வாஜ முனிவர் பெரும் தவமியற்றிக் கொண்டிருக்கும்
போது அவரின் தவத்தைக் கெடுக்க வந்த காந்தர்வக் கன்னியின்பால் மோகம்
கொண்டு அவளை ஆலிங்கனம் செய்ய அவ்வளவிலேயே ஒரு ஆண் மகவு
உண்டாக இக்குழவியை என்ன செய்வதென்று பிரம்மன் சிந்தனையில் மூழ்க
அதற்கு மஹாவிஷ்ணுவும் சிவபெருமானும் இக்குழந்தையின் வளர்ச்சி குறித்து
நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று
சொல்லி, மஹாவிஷ்ணுவும் லட்சுமியும் வேடர் உருக்கொண்டு அக்குழந்தைக்கு
உயிர் கொடுக்கலாயினர்.

     இஃதிவ்வாறிருந்த சமயத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தின் வம்ச வீழ்ச்சி
ஏற்படவே, தங்கள் குலம் தழைக்க நல்ல வாரிசு வேண்டுமென
இப்பெருமாளைத் துதித்துவிட்டு திரும்பும்போது வேடன் உருக்கொண்டிருந்த
எம்பெருமானால் இம்மகவு அவர்களின் கையில் தரப்பட்டது. பிரம்மனாலும்
விஷ்ணுவாலும் வளர்க்கும் பொறுப்பு உண்டானதால் பரமேஸ்வரன் என்று
பெயரிட்டதாகவும் ஒரு கதை உண்டு.

     இதை நினைவு படுத்தும் முகமாக பரமேஸ்வரன் இக்கோவிலுக்கு 18
யானைகளைக் கொடுத்திருந்ததாகவும் கூறுவர். யானைப்பாலை உண்டு
வளர்ந்த அவன் மிக்க பராக்கிரமசாலியாகவும், பலசாலியாகவும் விளங்கினான்.

     பல்லவர்கள் யார் என்பதை ஆராயப் புகுந்த வரலாற்று அறிஞர்கள்
பல்லவர்களின் வம்ச வழியை அடையாளம் காணுமிடத்து பரத்வாஜ கோத்ரம்
என்றவொரு பிறப்புரிமையைக் காட்டுவதும் இங்கு உற்று நோக்கத் தக்கதாகும்.

     பரமேஸ்வர வர்மனுக்கு இப்பெருமான் 18 கலைகளை போதித்ததாகவும்,
அவைகளைச் சொல்வதற்காக எழுந்த நிலையில் நின்ற திருக்கோலத்திலும்,
சீடனுக்கு உபதேசித்தருள குருவாக அமர்ந்த திருக்கோலத்திலும், அவனுக்கு
சேவை சாதிக்க கிடந்த திருக்கோலத்திலும் இருந்ததாகக் கூறுவர்.

     இதனை நினைவுகூறும். முகத்தான்தான் பரமேஸ்வரவர்மன் இன்றுள்ள
நிலையில் 3 அடுக்குகளாகக் கட்டி முதல் அடுக்கில் (கீழ் அடுக்கில்)
பெருமாள் வீற்றிருந்த நிலையிலும், இரண்டாவது தளத்தில் ரங்கநாதனாகச்
சயன திருக்கோலத்திலும், மூன்றாவது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும்
எம்பெருமானை எழுந்தருளச் செய்தார்.

     மூன்றாவது அடுக்கில் நின்ற திருக்கோலத்தில் அமைக்கப்பட்ட சிலை
ஒரு சமயம் மழையின் போது உண்டான பேரிடியின் காரணமாகச்
சிதலமடைய பிறகு அவ்விடத்தில்