பக்கம் எண் :

342

சுதையால் செய்யப்பட்ட சிலை வைக்கப்பட்டது. (இந்நிகழ்ச்சி நடைபெற்றதும்
பல்லவர்கள் காலத்திலேதான்) இது தவிர மற்ற இரண்டு தளத்திலும் உள்ள
சிலைகள் கற்களில் வடிக்கப்பட்டவையாகும்.

     ஸ்ரீ வைகுண்டமென்னும் பரமபதத்தில் உள்ள விரஜா நதியே இங்கு
புஷ்கரணியாக அமைந்துள்ளதாக ஐதீஹம்.

மூலவர்

     பரமபதநாதன், மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.

தாயார்

     வைகுந்த வல்லி

தீர்த்தம்

     ஐரம்மத தீர்த்தம்

விமானம்

     முகுந்த விமானம்

காட்சி கண்டவர்கள்

     பல்லவ மன்னன்.

சிறப்புக்கள்

     1. மாமல்லபுரத்தைப் போன்று கவினுறு சிற்பங்கள் இக்கோவிலின்
உட்புறச் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளமை மிகவும் வியத்தற்குரியதாகும்.

     2. பல்லவ மன்னர்களின் குடவரைக் கோவில் அமைப்பின்படி
இத்தலத்தின் மூலவரும் அதைச் சுற்றியுள்ள பிரகாரம் மற்றும் தூண்கள்
யாவும் ஒரே பாறையில் குடையப்பட்டதாகும்.

     3. பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் தனது அரசு சம்பந்தப்பட்ட
சகல காரியங்களுக்கும், தான் போர் மேற் செல்வதற்கும், இப்பெருமாளையே
குருவாகக் கொண்டு வெற்றிமேல் வெற்றி கண்டான். இவன் பாண்டியனை
வென்றதை திருமங்கையாழ்வார் தனது பாடலில்.
 

     தேர்மன்னு தென்னவனை முனையில் செறுவில்
          திறல் வாட்டிய திண் சிலையோன்
     பார் மன்னு பல்லவர் கோன் பணிந்துவரும் - பர
          மேச்சுர விண்ணக ரமதுவே - என்கிறார்.