பக்கம் எண் :

391

நிலையை உண்டாக்குகிறார். இறுதியில் ரிஷிகளின் தவத்தை மெச்சிய பகவான்
நரசிம்ம மூர்த்தியாக அவர்களுக்கு காட்சி கொடுத்து நின்றான்.

     நரசிம்ம அவதாரத்தைக் கண்டு களித்த ஆஞ்சநேயர் ஆனந்த பஜனம்
செய்து நிற்க ஆஞ்சநேயா நீ நமது முன்பமர்ந்து யோக ஆஞ்சநேயராக
மக்களுக்கு தீராத பிணிகளையுந் தீர்த்து கலியுகம் முடியும் தறுவாயில் எம்மை
வந்தடைவாயாக என்றருளி மறைந்தார்.

     இதனால் தான் யோக நிலையில் அமர்ந்த (சங்கு சக்கரத்துடன்)
ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னதி உள்ளது. இப்பிரதான கீர்த்தி அனுமனுக்கு
வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லை. கலியுகம் முடியும் வரை அனுமனும்
கலியுகத்திலேயே வாழ்வதாக ஐதீஹம். எனவேதான் பக்தி ரசத்தோடு
இராமாயணம் படிக்கும் இடம் தோறும் அனுமன் அருவமாகவோ
உருவமாகவோ பிரத்யட்சம் ஆவதாய் ஐதீஹம்.

மூலவர்

     யோக நரசிம்மர் (அக்காரக்கனி) வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே
திருமுக மண்டலம்

தாயார்

     அம்ருதவல்லி (தனிக்கோயில் நாச்சியார்)

உற்சவர்

     பக்தவத்ஸ்ல பெருமாள் (தக்கான்)

தீர்த்தம்

     அம்ருத தீர்த்தம் தக்கான் குளம் பாண்டவ தீர்த்தம்

விமானம்

     ஸிம்ஹ விமானம் கோஷ்டாக்ருதி விமானம் (ஸிம்ஹாக்ர விமானம்)
ஹேமகோடி விமானம் என்றும் சொல்லப்படும்.

காட்சி கண்டவர்கள்

     ஆஞ்சநேயர், ஸப்த ரிஷிகள்

     இங்கு கீழே உற்சவரும், சுமார் 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற
பெரிய மலைமீது மூலவரும் அதனருகில் உள்ள சிறிய மலையில் சங்கு
சக்கரங்களுடன் இலங்கும் ஆஞ்சநேயரும் அமர்ந்துள்ளனர்.