பக்கம் எண் :

71

     அப்பாலரங்கம் ஸ்ரீரங்கத்தைவிட முன்னானது என்னும் கருத்தை
ஒப்பலாம்.

     3. நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார்,
பெரியாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்களால் 33 பாக்களால் மங்களாசாசனம்
செய்யப்பட்ட ஸ்தலம்.

     4. நம்மாழ்வார் இப்பெருமானைப் பாடிவிட்டுத்தான் மோட்சத்திற்குச்
சென்றார். நம்மாழ்வாரால் கடைசியாக மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்
இது தான். அதனால்தான் தலைப்பில் கொடுத்த பாடலில் அடங்கப்
பிடித்தேன் அதாவது பெருமானுக்குள் “அடங்கப் பிடித்தேன்” என்றார்
போலும்.

     5. இங்கு பெருமானுக்கு தினந்தோறும் இரவில் அப்பம் அமுது செய்துப்
படைக்கப்படுகிறது. அப்பம் அமுது செய்து தினந்தோறும் படைக்கப்படும்
திவ்ய தேசம் இது ஒன்றுதான்.

     6. ஸ்ரீரெங்க ராஜ சரிதபாணம் என்னும் நூல் இத்தலம் பற்றிய
குறிப்புக்களை கொடுக்கிறது.

     7. இத்தலமும், சூழ்ந்துள்ள இயற்கைக் காட்சிகளும்
திருமங்கையாழ்வாரின் பாடல்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

     8. காவிரிக் கரையில் ஒரு மேட்டின் மேல் அமைந்துள்ள இக்கோவில்
தொலை தூரத்தில் இருந்து பார்ப்பதற்கும், கொள்ளிட நதியில் ஒரு
கோணத்தில் இருந்து பார்ப்பதற்கும் பேரழகு வாய்ந்தது.

     9. ஆழ்வார்கள் ஒரு ஸ்தலத்தில் அனுபவிக்கும் பெருமாளை மற்றோர்
ஸ்தலத்தை மங்களாசாசனம் செய்யும்போது மறக்க வொன்னா ஆற்றாமையால்
மீண்டும் மங்களாசாசனம் செய்வது மரபும் வழக்கமுமாயிற்று.

     பேர் நகரில் வணங்கிப் போன பின்பும் அப்பக்குடத்தான் திருமங்கை
மன்னனை விடாது பின் தொடர்கிறார். தம்மை விட்டு நீங்காத அந்த
அர்ச்சாவதார சோதியை திருவெள்ளறை சென்று கண்டேன் என்று மீண்டும்
மங்களாசாசனம் செய்கிறார். இதோ அப்பாடல்.,
 

     துளக்கமில் சுடரை, அவுணணுடல்
          பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
     அளப்பி லாரமு தையம ரர்க்கருள்
          விளக்கினை, சென்று வெள்ளறைக் காண்டுமே.