தொடக்கம் |
|
|
1. திருமலைச் சருக்கம் 4. திருக்கூட்டச் சிறப்பு |
1. | பூத நாயகர் புற்று இடம் கொண்டவர் ஆதி தேவர் அமர்ந்த பூங் கோயிலில் சோதி மா மணி நீள் சுடர் முன்றில் சூழ் மூது எயில் திரு வாயில் முன் ஆயது; |
|
உரை
|
|
2. | பூவார் திசை முகன் இந்திரன் பூமிசை மா வாழ் அகலத்து மால் முதல் வானவர் ஓவாது எவரும் நிறைந்து உறைந்து உள்ளது தேவா சிரியன் எனும் திருக் காவணம். |
|
உரை
|
|
3. | அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல் நிரந்த நீற்று ஒளியால், நிறை தூய்மையால் புரந்த அஞ்சு எழுத்து ஓசை பொலிதலால் பரந்த ஆயிரம் பால் கடல் போல்வது; |
|
உரை
|
|
4. | ‘அகில காரணர் தாள் பணிவார்கள் தாம் அகில லோகமும் ஆளற்கு உரியர் என்று அகில லோகத்து உளார்கள் அடைதலின் அகில லோகமும் போல்வது; அதன் இடை. |
|
உரை
|
|
5. | அத்தர் வேண்டி முன் ஆண்டவர்; அன்பினால் மெய்த் தழைந்து விதிர்ப்புஉறு சிந்தையார்; கைத் திருத் தொண்டு செய்கடப் பாட்டினார்; இத்திறத்தவர் அன்றியும் எண் இலார்; |
|
உரை
|
|
6. | மாசு இலாத மணி திகழ் மேனி மேல் பூசும் நீறு போல் உள்ளும் புனிதர்கள் தேசினால் எத் திசையும் விளக்கினார்; பேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார்; |
|
உரை
|
|
7. | பூதம் ஐந்தும் நிலையில் கலங்கினும் மாது ஓர் பாகர் மலர்த்தாள் மறப்பு இலார்; ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார்; கோது இலாத குணப் பெருங் குன்றுஆனார். |
|
உரை
|
|
8. | கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்; ஓடும் செம் பொனும் ஒக்கவே நோக்குவார்; கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்; |
|
உரை
|
|
9. | ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணி அலது ஒன்று இலார்; ஈர அன்பினர்; யாதும் குறைவு இலார் வீரம் என்னால் விளம்பும் தகையதோ? |
|
உரை
|
|
10. | வேண்டு மாறு விருப்பு உறும் வேடத்தர்; தாண்ட வப் பெருமான் தனித் தொண்டர்கள்; நீண்ட தொல் புகழ் ஆர் தம் நிலைமையை ஈண்டு வாழ்த்து கேன்; என்ன அறிந்து ஏத்துகேன்? |
|
உரை
|
|
11. | இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான் அந்தம் இல் புகழ் ஆலால சுந்தரன் சுந்தரத் திருத் தொண்டத் தொகைத் தமிழ் வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம். |
|
உரை
|