தொடக்கம் |
|
|
3. இலை மலிந்த சருக்கம் 11. கண்ணப்ப நாயனார் புராணம் |
1. | மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக் காவலர் திருக் காளத்திக் கண்ணப்பர் திரு நாடு என்பர்; நாவலர் புகழ்ந்து போற்ற நல் வளம் பெருகி நின்ற பூ அலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு. |
|
உரை
|
|
2. | இத் திரு நாடு தன்னில் இவர் திருப்பதி யாது? என்னில், நித்தில அருவிச் சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர், மத்த வெங் களிற்றுக் கோட்டு வன் தொடர் வேலி கோலி ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும். |
|
உரை
|
|
3. | குன்றவர் அதனில் வாழ்வார் கொடும் செவி ஞமலி யார்த்த வன் திரள் விளவின் கோட்டு வார் விலை மருங்கு தூங்கப் பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும். |
|
உரை
|
|
4. | வன் புலிக் குருளையோடும் வயக் கரிக் கன்றினோடும் புன் தலைச் சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி, அன்பு உறு காதல் கூர அணையும் மான் பிணைகேளாடும் இன்பு உற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும். |
|
உரை
|
|
5. | வெல் படைத் தறுகண் வெஞ் சொல் வேட்டுவர் கூட்டம் தோறும் கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச் சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடிக் ‘கல்’ எனும் ஒலியின் மேலும் கறங்கு இசை அருவி எங்கும். |
|
உரை
|
|
6. | ஆறு அலைத்து உண்ணும் வேடர் அயல் புலம் கவர்ந்து கொண்ட வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி ஏறு உடை வானம் தன்னில் இடிக் குரல் எழிலியோடு மாறு கொள் முழக்கம் காட்டும் மதக் கை மா நிரைகள் எங்கும். |
|
உரை
|
|
7. | மைச் செரிந்தது அனைய மேனி வன் தொழில் மறவர்; தம்பால் அச்சமும் அருளும் என்றும் அடைவு இலார்; உடை வன் தோலர்; பொச்சை யின் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும் நச்சு அழல் பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான். |
|
உரை
|
|
8. | பெற்றியால் தவம் முன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால் குற்றமே குணமா வாழ்வான்; கொடுமையே தலை நின்றுள்ளான்; வில் தொழில் விறலின் மிக்கான்; வெஞ் சின மடங்கல் போல்வான்; மற்று அவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள். |
|
உரை
|
|
9. | அரும் பெறல் மறவர் தாயத்து ஆன்ற தொல் குடியில் வந்தாள்; இரும் புலி எயிற்றுத் தாலி இடை இடை மனவும் கோத்துப் பெரும் புறம் அலையப் பூண்டாள் பீலியும் குழையும் தட்டச் சுரும்பு உறு படலை முச்சிச் சூர் அரிப் பிணவு போல்வாள். |
|
உரை
|
|
10. | பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு, இனிப் புதல்வர்ப் பேறே அரியது என்று எவரும் கூற, அதற்படு காதலாலே முருகு அலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று, பரவுதல் செய்து, நாளும் பராய்க் கடன் நெறியில் நிற்பார். |
|
உரை
|
|
11. | வாரணச் சேவலோடும் வரி மயில் குலங்கள் விட்டுத் தோரண மணிகள் தூக்கிச் சுரும்பு அணி கதம்பம் நாற்றிப் போரணி நெடு வேலோற்குப் புகழ்புரி குரவை தூங்கப் பேர் அணங்கு ஆடல் செய்து, பெருவிழா எடுத்த பின்றை. |
|
உரை
|
|
12. | பயில் வடுப் பொலிந்த யாக்கை வேடர்தம் பதியாம் நாகற்கு எயில் உடைப் புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன மயில் உடைக் கொற்ற ஊர்தி வரை உரம் கிழித்த திண்மை அயில் உடைத் தடக்கை வென்றி அண்ணலார் அருளினாலே. |
|
உரை
|
|
13. | கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீட ஊனம் இல் பலிகள் போக்கி உறு கடன் வெறி ஆட்டோடும் ஆன அத் திங்கள் செல்ல, அளவு இல் செய் தவத்தினாலே பால் மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது. |
|
உரை
|
|
14. | கரிப் பரு மருப்பின் முத்தும் கழை விளை செழுநீர் முத்தும் பொருப்பினின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி், வரிச் சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும் அரிக் குறும் துடியே அன்றி, அமரர் துந்துபியும் ஆர்த்த. |
|
உரை
|
|
15. | அருவரைக் குறவர் தங்கள் அகன் குடிச் சீறூர் ஆயமும் பெரு விழா எடுத்து மிக்க பெரும் களி கூறும் காலைக் கரு வரை காள மேகம் ஏந்தியது என்னத் தாதை பொரு வரைத் தோள்கள் ஆரப் புதல்வனை எடுத்துக் கொண்டான். |
|
உரை
|
|
16. | கருங் கதிர் விரிக்கும் மேனிக் காமரு குழவி தானும் இரும்புலிப் பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி, அரும் பெறல் உலகம் எல்லாம் அளப்பரும் பெருமை காட்டித் தருங்குறி பலவும் சாற்றும் தன்மையில் பொலிந்து தோன்ற. |
|
உரை
|
|
17. | அண்ணலைக் கையில் ஏந்தற்கு அருமையால் உரிமைப் பேரும் திண்ணன் என்று இயம்பும் என்னத் திண்சிலை வேடர் ஆர்த்தார் புண்ணியப் பொருளாய் உள்ள பொருவில் சீர் உருவினானைக் கண்ணினுக்கு அணியாத் தங்கள் கலன்பல அணிந்தார் அன்றே. |
|
உரை
|
|
18. | வரை உறை கடவுள் காப்பு மறக்குடி மரபில் தங்கள் புரையில் தொல் முறைமைக்கு ஏற்பப் பொருந்துவ போற்றிச் செய்து விரை இளம் தளிரும் சூட்டி, வேம்பு இழைத்து இடையே கோத்த அரை மணிக் கவடி கட்டி, அழகு உற வளர்க்கும் நாளில். |
|
உரை
|
|
19. | வருமுறைப் பருவம் தோறும் வளம்மிகு சிறப்பில் தெய்வப் பெருமடை கொடுத்துத் தொக்க பெருவிறல் வேடர்க்கு எல்லாம் திருமலி துழனி பொங்கச் செழுங்களி மகிழ்ச்சி செய்தே, அருமையின் புதல்வர்ப் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார். |
|
உரை
|
|
20. | ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடித் தளர்வு நீங்கிப் பூண் திகழ் சிறு புன் குஞ்சிப் புலி உகிர்ச் சுட்டி சாத்தி மூண்டு எழு சினத்துச் செங்கண் முளவு முள் அரிந்து கோத்த நாண் தரும் எயிற்றுத் தாலி நலம் கிளர் மார்பில் தூங்க. |
|
உரை
|
|
21. | பாசொளி மணியோடு ஆர்த்த பன் மணிச் சதங்கை ஏங்கக் காசொடு தொடுத்த காப்புக் கலன் புனை அரைஞாண் சேர்த்தித் தேசு உடை மருப்பின் தண்டை செறிமணிக் குதம்பை மின்ன மாசு அறு கோலம் காட்டி மறுகு இடை ஆடும் நாளில். |
|
உரை
|
|
22. | தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில் உள் நனைந்து அமுதம் ஊரி ஒழுகிய மழலைத் தீம் சொல் வண்ண மென் பவளச் செவ்வாய் குதட்டியே வளரா நின்றார். |
|
உரை
|
|
23. | பொரு புலிப் பார்வைப் பேழ்வாய் முழை எனப் பொன் கை நீட்டப் பரிஉடைத் தந்தை கண்டு, பைந்தழை கைக் கொண்டு ஓச்ச, இரு சுடர்க்கு உறு கண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி, வருதுளி முத்தம், அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி். |
|
உரை
|
|
24. | துடிக் குறடு உருட்டி ஓடித் தொடக்கு நாய்ப் பாசம் சுற்றிப் பிடித்து அறுத்து எயினப் பிள்ளைப் பேதையர் இழைத்த வண்டல் அடிச் சிறு தளிரால் சிந்தி, அருகு உறு சிறுவரோடும் குடிச் செறி குரம்பை எங்கும் குறு நடைக் குறும்பு செய்து. |
|
உரை
|
|
25. | அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின் வனை தரு வடிவார் கண்ணி மறச் சிறு மைந்த ரோடும் சினை மலர்க் காவுள் ஆடிச் செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த புனை மருப்பு உழலை வேலிப் புறச்சிறு கானில் போகி. |
|
உரை
|
|
26. | கடு முயல் பறழினோடும் கான ஏனத்தின் குட்டி கொடு வரிக் குருளை, செந்நாய், கொடும் செவிச் சாபம் ஆன முடுகிய விசையில் ஓடித் தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து இடு மரத் தாளில் கட்டி வளப்பன எண் இலாத. |
|
உரை
|
|
27. | அலர் பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையும் ஆட்டிக் குல முது குறத்தி ஊட்டிக் கொண்டு கண் துயிற்றிக் கங்குல் புலர ஊன் உணவு நல்கிப் புரி விளையாட்டின் விட்டுச் சில முறை ஆண்டு செல்லச் சிலை பயில் பருவம் சேர்ந்தார். |
|
உரை
|
|
28. | தந்தையும் மைந்தனாரை நோக்கித் தன் தடித்த தோளால் சிந்தை உள் மகிழப் புல்லிச் சிலைத் தொழில் பயிற்ற வேண்டி, முந்தை அத் துறையில் மிக்க முதியரை அழைத்துக் கூட்டி வந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்குச் சொல்லி விட்டான். |
|
உரை
|
|
29. | ‘வேடர் தம் கோமான் நாகன் வென்றி வேள் அருளால் பெற்ற சேடரின் மிக்க செய்கைத் திண்ணன் வில் பிடிக்கின்றான்’ என்று ஆடியல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு மாடு உயர் மலைகள் ஆளும் மறக் குலத் தலைவர் எல்லாம். |
|
உரை
|
|
30. | மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும் கொலை புரி களிற்றுக் கோடும் பீலியின் குவையும் தேனும் தொலைவில் பல் நறவும் ஊனும் பலங்களும் கிழங்கும் துன்றச் சிலை பயில் வேடர் கொண்டு திசை தொறும் நெருங்க வந்தார். |
|
உரை
|
|
31. | மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறுஇல் சீறூர் எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தார் எங்கும் பல் பெரும் கிளைஞர் போற்றப் பராய்க் கடன் பலவும் செய் வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன். |
|
உரை
|
|
32. | பான்மையில் சமைத்துக் கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்தத் தேன் அலர் கொன்றையார் தம் திருச்சிலைச் செம்பொன் மேரு வானது கடலின் நஞ்சம் ஆக்கிட அவர்க்கே பின்னும் கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினைக் காப்புச் சேர்த்தார். |
|
உரை
|
|
33. | சிலையினைக் காப்புக் கட்டும் திண் புலி நரம்பில் செய்த நலம் மிகு காப்பு நல் நாண் நாகனார் பயந்த நாகக் குலம் விளங்கு கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி, மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்து எடுத்து இயம்பினார்கள். |
|
உரை
|
|
34. | ஐவன அடிசில், வெவ்வேறு அமைத்தன புல்பால் கொன்றி மொய் வரைத் தினை மென் சோறு, மூங்கில் வன் பதங்கள், மற்றும், கைவினை எயினர் ஆக்கிக் கலந்த ஊன் கிழங்கு துன்றச் செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சினவில் வேடர். |
|
உரை
|
|
35. | செந் தினை இடியும் தேனும் அருந்துவார்; தேனில் தோய்த்து வெந்த ஊன் அயில்வார்; வேரி விளங்கனிக் கவளம் கொள்வார்; நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார்; வெவ் வேறு அந்தம் இல் உணவின் மேலோர் ஆயினர் அளவு இலார்கள். |
|
உரை
|
|
36. | அயல் வரைப் புலத்தின் வந்தார், அரும் குடி இருப்பில் உள்ளார் இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர், எயினர் எல்லாம் உயர் கதிர் உச்சி நீங்க, ஒழிவில் பல் நறவு மாந்தி, மயல் உறு களிப்பின் நீடி, வரி சிலை விழவு கொள்வார். |
|
உரை
|
|
37. | பாசிலைப் படலை சுற்றிப் பன் மலர்த் தொடையல் சூடிக் காசு உடை வடத் தோல் கட்டிக் கவடி மெய்க் கலன்கள் பூண்டு, மாசு இல் சீர் வெட்சி முன்னா வருதுறைக் கண்ணி சூடி, ஆசு இல் ஆசிரியன் ஏந்தும் அடல் சிலை மருங்கு சூழ்ந்தார். |
|
உரை
|
|
38. | தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும் எண் திசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும் திண்திறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும்பு இடித்துச் செல்லக் கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலம் கொண்டார்கள். |
|
உரை
|
|
39. | குன்றவர் களி கொண்டாடக் கொடிச்சியர் துணங்கை ஆடத் துன்றிய மகிழ்ச்சியோடும் சூர் அரமகளிர் ஆட, வென்றி வில் விழவினோடும் விருப்புடை ஏழாம் நாளாம் அன்று இரு மடங்கு செய்கை அழகு உற அமைத்த பின்றை. |
|
உரை
|
|
40. | வெங் கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில், எங்கும் மங்கல வாழ்த்து மல்க, மருங்கு பல்லியங்கள் ஆர்ப்பத் தங்கள் தொல் மரபின் விஞ்சைத் தனுத் தொழில் வலவர் தம்பால் பொங்கு ஒளிக் கரும் போர் ஏற்றைப் பொருசிலை பிடிப்பித்தார்கள். |
|
உரை
|
|
41. | பொன் தட வரையின் பாங்கர்ப் புரிவு உறு கடன் முன் செய்த வில் தொழில் களத்தில் நண்ணி, விதிமுறை வணங்கி, மேவும் அற்றை நாள் தொடங்கி, நாளும் அடல் சிலை ஆண்மை முற்றக் கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம். |
|
உரை
|
|
42. | வண்ண வெஞ் சிலையும் மற்றப் படைகளும் மலரக் கற்றுக் கண் அகல் சாயல் பொங்கக் கலை வளர் திங்களே போல் எண் இரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார்; எல்லை இல்லாப் புண்ணியம் தோன்றி மேல் மேல் வளர்வதன் பொலிவு போல்வார். |
|
உரை
|
|
43. | இவ் வண்ணம் திண்ணனார் நிரம்பும் நாளில், இருங் குறவர் பெரும் குறிச்சிக்கு இறைவன் ஆய மை வண்ண வரை நெடும் தோள் நாகன் தானும் மலை எங்கும்வனம் எங்கும் வரம்பில் காலம் கை வண்ணச் சிலை வேட்டை ஆடித் தெவ்வர் கணம் நிரைகள் பல கவர்ந்து, கானம் காத்து, மெய் வண்ணம் தளர |
|
உரை
|
|
44. | அங்கண் மலைத் தடம் சாரல் புனங்கள் எங்கும் அடல் ஏனம் புலி, கரடி, கடமை, ஆமா, வெங் கண் மரை, கலையொடு, மான், முதலாய் உள்ள மிருகங்கள் மிக நெருங்கி மீதூர் காலைத் ‘திங்கள் முறை வேட்டை வினை தாழ்த்தது என்று சின வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று, தங்கள் குல முதல் |
|
உரை
|
|
45. | சொன்ன உரை கேட்டலுமே நாகன் தானும் சூழ்ந்து வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி, முன் அவர்கட்கு உரை செய்வான், ‘மூப்பினாலே முன்பு போல் வேட்டையினில் முயல கில்லேன் என் மகனை உங்களுக்கு நாதன் ஆக எல்லீரும் கைக் கொள் மின்’ என்ற போதின், அன்னவரும் இரங்கிப் பின் |
|
உரை
|
|
46. | ‘இத்தனை காலமும் நினது சிலைக் கீழ் தங்கி, இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம், இன்னும் அத்த! நினது அருள் வழியே நிற்பது அல்லால். அடுத்த நெறி வேறு உளதோ? அதுவே அன்றி மெய்த்த விறல் திண்ணனையும் மரபில் சால மேம் படவே பெற்று அளித்தாய் விளங்கும் மேன்மை வைத்த சிலை |
|
உரை
|
|
47. | சிலை மறவர் உரை செய்ய நாகன் தானும் திண்ணனை முன் கொண்டுவரச் செப்பி விட்டு, ‘மலை மருவு நெடும் கானில் கன்னி வேட்டை மகன் போகக் காடு பலி மகிழ ஊட்டத் தலை மரபின் வழி வந்த தேவராட்டி தனை அழைமின்’ என, அங்குச் சார்ந்தோர் சென்று, நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை |
|
உரை
|
|
48. | கானில் வரித்தளிர் துதைந்த கண்ணி சூடிக் கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து மானின் வயிற்று அரிதாரத் திலகம் இட்டு மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டு, தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழத் தழைப்பீலி மரவுரி மேல் சார எய்திப் பூ நெருங்கு தோரை மலி சேடை நல்க |
|
உரை
|
|
49. | நின்ற முது குறக்கோலப் படிமத்தாளை நேர் நோக்கி, ‘அன்னை! நீ நிரப்பு நீங்கி நன்று இனிதின் இருந்தனையோ’ என்று கூறும் நாகன் எதிர், நலம் பெருக வாழ்த்தி, ‘நல்ல மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை வளனும் வேண்டிற்று எல்லாம் அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன்; |
|
உரை
|
|
50. | ’கோட்டம் இல் என் குல மைந்தன் திண்ணன் எங்கள் குலத் தலைமை யான் கொடுப்பக் கொண்டு, பூண்டு பூட்டு உறு வெஞ் சிலை வேடர் தம்மைக் காக்கும் பொருப்பு உரிமை புகுகின்றான் அவனுக்கு என்றும் வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து, வேறு புலம் கவர் வென்றி மேவு மாறு காட்டில் உறை ª |
|
உரை
|
|
51. | மற்று அவன்தன் மொழி கேட்ட வரைச் சூராட்டி ‘மனம் மகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு, எற்றையினும் குறிகள் மிக நல்ல ஆன; இதனாலே உன் மைந்தன் திண்ணன் ஆன வெற்றி வரிச் சிலையோன் நின் அளவில் அன்றி. மேம்படுகின்றான்’ என்று விரும்பி வாழ்த்திக் கொற்ற வனத் தெ |
|
உரை
|
|
52. | தெய்வம் நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார் சிலைத் தாதை அழைப்பச் சீர் கொள் மை விரவு நறும் குஞ்சி வாசக் கண்ணி மணி மலை ஒன்று வந்தது என்னக் கை விரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி தாதை கழல் வணங்கும் போதில் செய் வரை போல் புயம் இரண்டும் செறியப |
|
உரை
|
|
53. | முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன் மூப்பு எனை வந்து அடைதலினால் முன்பு போல என்னுடைய முயற்சியினால் வேட்டை ஆட இனி எனக்குக் கருத்து இல்லை எனக்கு மேலாய் மன்னு சிலை மலையர் குலக் காவல் பூண்டு மாறு எறிந்து மா வேட்டை ஆடி என்றும் உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்று |
|
உரை
|
|
54. | தந்தை நிலை உள்கொண்டு தளர்வு கொண்டு தங்கள் குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு, முந்தையவன் கழல் வணங்கி, முறைமை தந்த முதல் சுரிகை உடை தோலும் வாங்கிக் கொண்டு, சிந்தை பரம் கொள நின்ற திண்ணன |
|
உரை
|
|
55. | ‘நம் உடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்து, தெம் முனையில் அயல் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளம் ஒழியாச் சிறப்பின் வாழ்வாய்; வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும் விரைந்து நீ தாழாதே வேட்டை ஆட இம் முரண் ª |
|
உரை
|
|
56. | செங் கண் வயக் கோள் அரி ஏறு அன்ன திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற வெங் கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று, விடை கொண்டு, புறம் போந்து, வேடரோடும் மங்கல நீர்ச் சுனை படிந்து, மனையின் வைகி, வைகு இருளின் புலர் காலை வரி வில் சாலைப் பொங்கு சிலை |
|
உரை
|
|
57. | நெறி கொண்ட குஞ்சிச் சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய் ஒளிப் பீலி சேர்த்தி, வெறி கொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சி செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொளப் பின்பு செய்து. |
|
உரை
|
|
58. | முன் நெற்றியின் மீது முருந்து இடை வைத்த குன்றி தன்னில் புரி கொண்ட மயிர்க் கயிறு ஆரச் சாத்தி, மினனில் திகழ் சங்கு விளங்கு வெண் தோடு காதின் மன்னிப் புடை நின்றன மா மதி போல வைக. |
|
உரை
|
|
59. | கண்டத்து இடை வெண் கவடிக் கதிர் மாலை சேரக் கொண்டு அக் கொடு பல் மணி கோத்து இடை ஏனக் கோடு துண்டப் பிறை போல்வன தூங்கிட, வேங்கை வன்தோல் தண்டைச் செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க. |
|
உரை
|
|
60. | மார்பில் சிறு தந்த மணித்திரள் மாலை தாழத் தாரின் பொலி தோள் வலயங்கள் தழைத்து மின்னச் சேர் வில் பொலி கங்கணம் மீது திகழ்ந்த முன் கைக் கார் வில் செறி நாண் எறி கைச் செறி கட்டி கட்டி. |
|
உரை
|
|
61. | அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவத் திரையில் படு வெள் அலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி, நிரையில் பொலி நீள் உடை தோல் சுரிகைப் புறம் சூழ் விரையில் துவர் வார் விசி போக்கி அமைத்து, வீக்கி. |
|
உரை
|
|
62. | வீரக் கழல் காலின் விளங்க அணிந்து பாதம் சேரத் தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப் பாரப் பெரு வில் வலம் கொண்டு பணிந்து திண்ணன் சாரத் திருத்தாள் மடித்து ஏற்றி வியந்து தாங்கி. |
|
உரை
|
|
63. | அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கித் துங்கப் பெரு மா மழை போன்று துண் என்று ஒலிப்ப, வெங் கண் சினம் நீடு விலங்கு விலங்கி நீங்கச் செங் கைத் தலத்தால் தடவிச் சிறு நாண் எறிந்தார். |
|
உரை
|
|
64. | பல் வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏறி வில் வேடர் ஆயத் துடி மேவி ஒலிக்கும் முன்றிலி் சொல் வேறு வாழ்த்துத் திசைதோறும் துதைந்து விம்ம வல் ஏறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார். |
|
உரை
|
|
65. | மானச் சிலை வேடர் மருங்கு நெருங்கும் போதில், பானல் குல மாமலரில் படர் சோதியார் முன் தேன் நல் தசை தேறல் சருப் பொரி மற்றும் உள்ள கானப் பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள். |
|
உரை
|
|
66. | நின்று எங்கும் மொய்க்கும் சின வேடர்கள் நீங்கப் புக்குச் சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி, உன் தந்தை தந்தைக்கும் இந் நன்மைகள் உள்ள அல்ல; நன்றும் பெரிது உன் விறல்; நம் அளவு அன்று இது; என்றாள். |
|
உரை
|
|
67. | அப் பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை ஆட்டி தன்னைச் செப்பற்கு அரிது ஆய சிறப்பு எதிர் செய்து போக்கிக் கைப் பற்றிய திண் சிலைக் கார் மழை மேகம் என்ன மெய்ப் பொற்பு உடை வேட்டையின் மேல் கொண்டு எழுந்து போந்தார். |
|
உரை
|
|
68. | தாளில் வாழ் செருப்பர்; தோல் தழைத்த நீடு தானையார்; வாளியோடு சாபம் மேவு கையர்; வெய்ய வன் கணார்; ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண் இலார்; மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே. |
|
உரை
|
|
69. | வன் தொடர்ப் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவே வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதம் முன் சென்று மீளுமாறு போல்வ செய்ய நாவின் வாய வாய், ஒன்றொடு ஒன்று நேர் படாமல் ஓடும் நாய்கள் மாடு எலாம். |
|
உரை
|
|
70. | போர் வலைச் சிலைத் தொழில் புறத்திலே விளைப்ப அச் சார் வலைத் தொடக்கு அறுக்க ஏகும் ஐயர் தம்முளே கார் வலைப் படுத்த குன்று கானமா வளைக்க நீள் வார் வலைத் திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார். |
|
உரை
|
|
71. | நண்ணி மா மறைக் குலங்கள் நாட என்று நீடும் அத் தண் நிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார் தமைக் கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன் எண்ணில் பார்வை கொண்டு வேடர் எம் மருங்கும் ஏகினார். |
|
உரை
|
|
72. | கோடு முன்பு ஒலிக்கவும் குறுங் கண் ஆ குளிக்குலம் மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும் சேடு கொண்டகை விளிச் சிறந்த ஓசை செல்லவும் காடு கொண்டு எழுந்த வேடு, கை வளைந்து சென்றதே. |
|
உரை
|
|
73. | நெருங்கு பைந் தருக் குலங்கள் நீடு காடு கூட, நேர் வரும் கரும் சிலைத் தடக்கை மான வேடர் சேனை தான்; பொருந் தடம் திரைக்கடல் பரப்பு இடைப் புகும் பெரும் கரும் தரங்க நீள் புனல் களிந்தி கன்னி ஒத்ததே. |
|
உரை
|
|
74. | 'தென் திசைப் பொருப்புடன் செறிந்த கானின் மான் இனம், பன்றி, வெம் மரைக் கணங்கள், ஆதி ஆன பல் குலம் துன்றி நின்ற' என்று அடிச் சுவட்டின் ஒற்றர் சொல்லவே வன் தடக்கை வார் கொடு எம் மருங்கும் வேடர் ஓடினார். |
|
உரை
|
|
75. | ஓடி எறிந்து, வார் ஒழுக்கி யோசனைப் பரப்பு எலாம் நெடிய திண் வலைத் தொடக்கு நீள் இடைப் பிணித்து, நேர் கடி கொளப் பரந்த காடு காவல் செய்து அமைத்த பின், செடி தலைச் சிலைக்கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார். |
|
உரை
|
|
76. | வெஞ் சிலைக் கை வீரனாரும் வேடரோடு கூடி, முன் மஞ்சு அலைக்கும் மா மலைச் சரிப் புறத்து வந்த மா அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள் செஞ் சரத்தினோடு சூழல் செய்த கானுள் எய்தினார். |
|
உரை
|
|
77. | வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பர் ஆயம் ஓடி நேர் எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல, எங்கணும் மொய் குரல் துடிக் குலங்கள் பம்பை முன் சிலைத்து எழக் கை விளித்து, அதிர்த்து, மா எழுப்பினார்கள் கான் எலாம். |
|
உரை
|
|
78. | ஏனமோடு மான் இனங்கள், எண்கு, திண் கலைக் குலம் கான மேதி, யானை, வெம் புலிக் கணங்கள், கான் மரை ஆன மா அநேகம் மா வெருண்டு எழுந்து பாய முன் சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி, அம்பில் நூறினார். |
|
உரை
|
|
79. | தாள் அறுவன இடை துணிவன தலை துமிவன கலைமான்; வாளிகள் ஒடு குடல் சொரிதர மறிவன சில மரை மா; நீள் உடல், விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா; மீளி கொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே. |
|
உரை
|
|
80. | வெங் கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய்; செங் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா அங்கு எழு சிரம் உருவிய பொழுது, அடல் எயிறு உற, அதனைப் பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள். |
|
உரை
|
|
81. | பின் மறவர்கள் விடு பகழிகள் பிறகுஉற வயிறு இடை போய்; முன் நடுமுக மிசை உருவிட, முடுகிய விசையுடன் அக் கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவத் தன் எதிர் எதிர் பொருவன நிகர் தலையன பல கலைகள். |
|
உரை
|
|
82. | கரு வரை ஒரு தனு ஒடு விசை கடுகியது என முனை நேர் குரிசில் முன் விடும் அடுசரம் எதிர் கொலை பயில் பொழுது, அவையே பொரு கரி யொடு சின அரி இடை புரைஅற உடல் புகலால், வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அவ்வனமே. |
|
உரை
|
|
83. | நீள் இடை விசை மிசை குதிகொள நெடு முகில் தொட எழு மான் தாள் உறு கழல் மறவர்கள் விடு சரம் நிரை தொடர்வன தாம், வாள் விடுகதிர் மதி பிரிவுற வரும் என விழும் உழையைக் கோள் ஒடு பயில் பணி தொடர் நிலை கொள உள எதிர் பலவே. |
|
உரை
|
|
84. | கடல் விரி புனல் கொள விழுவன கரு முகில் என, நிரையே படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல், அடல் உறு சரம் உடல் உற வரை அடி இடம் அலமரலால், மிடை கரு மரை கரடிகெளாடு விழுவன வன மேதி. |
|
உரை
|
|
85. | பல துறைகளின் வெருவரல் ஒடு பயில் வலை அற நுழை மா உலமொடு படர்வன தகை உற உறு சினமொடு கவர் நாய்; நிலவிய இரு வினை வலை இடை நிலை சுழல் பவர் நெறி சேர் புலன் உறு மனன் இடை தடைசெய்த பொறிகளின் அளவு உளவே. |
|
உரை
|
|
86. | துடி அடியன மடி செவியன துறு கயமுனி தொடரார்; வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார்; அடி தளர் உறு கரு உடையன அணை உறு பிணை அலையார்; கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவோர். |
|
உரை
|
|
87. | இவ்வகை வரு கொலை மறவினை எதிர் நிகழ் உழி, அதிரக் கை வரைகலும் வெரு உற மிடை கான் எழுவதொர் ஏனம் பெய் கருமுகில் என, இடியொடு பிதிர் கனல் விழி சிதறி், மொய் வலைகளை அற, நிமிர்வுற முடுகிய கடு விசையில். |
|
உரை
|
|
88. | போம் அது தனை அடுதிறல் ஒடு பொரு மறவர்கள் அரி தாம் அவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில் தாம் ஒருவரும் அறிகிலர்; அவர் தனி தொடர் வழி அதன்மேல் ஏ முனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார். |
|
உரை
|
|
89. | நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரிவில் காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில் கூடினர் விடு பகழிகெளாடு கொலை ஞமலிகள் வழுவி, நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல். |
|
உரை
|
|
90. | குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி, இடி குரல், நீள் பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிது ஓடித் துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி சூழல் சென்று அதன் இடை நின்றது; வழிது தெருமரமரம் நிரையில். |
|
உரை
|
|
91. | அத் தரு வளர் சுழல் இடை அடை அதன் நிலை அறிபவர் முனா கைத் தெரி கணையினில் அடுவது கருதலர், விசை கடுகி, மொய்த்து எழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவிக் குத்தினர் உடல் முறிபட; எறி குல மறவர்கள் தலைவர். |
|
உரை
|
|
92. | வேடர் தம் கரிய செங்கண் வில்லியார் விசையில் குத்த மாடு இரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு, நாணன் 'காடனே! இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம் ஆடவன் கொன்றான்; அச்சோ!' என்று அவர் அடியில் தாழந்தார். |
|
உரை
|
|
93. | மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார்; வழி வந்து ஆற்ற உற்றது பசி வந்து; எம்மை உதவிய இதனைக் காய்ச்சிச் சற்று நீ அருந்தி, யாமும் தின்று தண்ணீர் குடித்து, வெற்றி கொள் வேட்டைக் காடு குறுகுவோம்; மெல்ல' என்றார். |
|
உரை
|
|
94. | என்று அவர் கூற நோக்கித் திண்ணனார் 'தண்ணீர் எங்கே நன்றும் இவ் வனத்தில் உள்ளது' என்று உரை செய்ய நாணன் 'நின்ற இப் பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்ட குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி' என்றான். |
|
உரை
|
|
95. | பொங்கிய சின வில் வேடன் சொன்னபின் 'போவோம் அங்கே; இங்கு இது தன்னைக் கொண்டு போதுமின்' என்று தாமும் அங்கு அது நோக்கிச் சென்றார்; காவதம் அரையில் கண்டார்; செங் கண் ஏறு உடையார் வைகும் திருமலைச் சாரல் சோலை. |
|
உரை
|
|
96. | 'நாணனே! தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணனா காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தசா சேண் உயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே கோணம் இல் குடுமித் தேவர் இருப்பர்; கும்பிடலாம்' என்றான். |
|
உரை
|
|
97. | 'ஆவது என் ? இதனைக் கண்டு இங்கு அணை தொறும் என் மேல் பாரம் போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல் மேல் மேவிய நெஞ்சும் வேறு ஓர் விருப்பு உற விரையா நிற்கும் தேவர் அங்கு இருப்பது எங்கே ? போகு' என்றார் திண்ணனார் தாம். |
|
உரை
|
|
98. | உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து, கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும் வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம் தோறும் திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினைச் சார்ந்தார். |
|
உரை
|
|
99. | ஆங்கு அதன் கரையின் பாங்கு ஓர் அணி நிழல் கேழல் இட்டு வாங்கு வில் காடன் தன்னை மரக் கடை தீக் கோல் பண்ணி ஈங்கு நீ நெருப்புக் காண்பாய் இம்மலை ஏறிக் கண்டு நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார். |
|
உரை
|
|
100. | அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின் தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார் தாம், களி வரும் மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டு கொண்டு, குளிர் வரு நதி ஊடு ஏகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார். |
|
உரை
|
|
101. | கதிரவன் உச்சி நண்ணக் கடவுள் மால் வரையின் உச்சி அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர் கலி முழக்கம் காட்ட 'இது என் கொல் நாணா ?' என்றார்க்கு, இம் மலைப் பெருந் தேன் சூழ்ந்து, மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி கொல்' என்றான். |
|
உரை
|
|
102. | முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிஇலா இன்பம் ஆன அன்பினை எடுத்துக் காட்ட, அளவுலா ஆர்வம் பொங்கி, மன் பெரும் காதல் கூர, வள்ளலார் மலையை நோக்கி, என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கை யோடும். |
|
உரை
|
|
103. | நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏறத் தாமும் பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி, ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல, ஐயர் நீள் நிலை மலையை ஏறி, நேர் படச் செல்லும் போதில். |
|
உரை
|
|
104. | திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றுஅவர் காணா முன்னே, அங் கணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்தத் தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டு அகல, நீங்கிப் பொங்கிய ஒளியின் நீழல் பொருஇல் அன்பு உருவம் ஆனார். |
|
உரை
|
|
105. | மாகம் ஆர் திருக் காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள ஏக நாயகரைக் கண்டார்; எழுந்த பேர் உவகை அன்பின் வேகம் ஆனது மேல் செல்ல மிக்கது ஓர் விரைவின் ஓடும மோகமாய் ஓடிச் சென்றார்; தழுவினார்; மோந்து நின்றார். |
|
உரை
|
|
106. | நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால் தோறும் வடிவுஎலாம் புளகம் பொங்க, மலர்க் கண்ணீர் அருவி பாய, 'அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ' என்று, படி இலாப் பரிவு தான் ஓர் படிவம் பரிசு தோன்ற. |
|
உரை
|
|
107. | வெம் மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதியார் போல் கைம் மலை, கரடி, வேங்கை, அரி திரி கானம் தன்னில் உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றிக் கெட்டேன்! இம் மலைத் தனியே நீர் இங்கு இருப்பதே ?' என்று நைந்தார். |
|
உரை
|
|
108. | கைச்சிலை விழுந்தது ஓரார் காளையார்; மீள, இந்தப் பச்சிலை யோடு பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து, மச்சு இது செய்தார் யாரோ ?' என்றலும் மருங்கு நின்ற அச்சிலை நாணன் தானும் 'நான் இது அறிந்தேன்' என்பான். |
|
உரை
|
|
109. | 'வன் திறல் உந்தை யோடு மா வேட்டை ஆடிப் பண்டு இக் குன்று இடை வந்தோம் ஆகக் குளிர்ந்த நீர் இவரை ஆட்டி, ஒன்றிய இலைப் பூச்சூட்டி, ஊட்டி, முன்பு அறைந்த தேர் பார்ப்பான் அன்று இது செய்தான்; இன்றும் அவன் செய்தது ஆகும்' என்றான். |
|
உரை
|
|
110. | உள் நிறைந்து எழுந்த தேனும் ஒழிவுஇன்றி ஆரா அன்பில் திண்ணனார் 'திருக் காளத்தி நாயனார்க்கு இனிய செய்கை எண்ணிய இவைகொலாம்' என்று இது கடைப் பிடித்துக் கொண்டு அவ் அண்ணலைப் பிரிய மாட்டா அளவுஇல் ஆதரவு நீட. |
|
உரை
|
|
111. | இவர் தமைக் கண்டேனுக்குத் தனியராய் இருந்தார் என்னே! இவர் தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை; இவர் தமைப் பிரிய ஒண்ணாது; என்செய்கேன் ? இனி யான்; சால இவர் தமக்கு இறைச்சி கொண்டு இங்கு எய்தவும் வேண்டும் என்று. |
|
உரை
|
|
112. | போதுவர்; மீண்டு செல்வர்; புல்லுவர்; மீளப் போவர்; காதலின் நோக்கி நிற்பர்; கன்று அகல் புனிற்று ஆப் போல்வர் 'நாதனே! அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே கோது அறத் தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன்' என்பார். |
|
உரை
|
|
113. | 'ஆர் தமர் ஆக நீர் இங்கு இருப்பது ? என்று அகலமாட்டேன்; நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன்' என்று சோர் தரு கண்ணீர் வாரப் போய் வரத் துணிந்தார் ஆகி, வார் சிலை எடுத்துக் கொண்டு மலர்க் கையால் தொழுது போந்தார். |
|
உரை
|
|
114. | முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து, நாணன் பின்பு வந்து அணைய, முன்னைப் பிற துறை வேட்கை நீங்கி, அன்பு கொண்டு உய்ப்பச் செல்லும் அவர் திரு முகலி ஆற்றின் பொன் புனை கரையில் ஏறிப் புது மலர்க் காவில் புக்கார். |
|
உரை
|
|
115. | காடனும் எதிரே சென்று தொழுது 'தீக் கடைந்து வைத்தேன்; கோடு உடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம் மாடு உற நோக்கிக் கொள்ளும்; மறித்து நாம் போகைக்கு இன்று நீட நீர் தாழ்த்தது என்னோ ?' என்றலும் நின்ற நாணன். |
|
உரை
|
|
116. | அங்கு இவன் மலையில் தேவர் தம்மைக் கண்டு அணைத்துக் கொண்டு வங்கினைப் பற்றிப் போதா வல் உடும்பு என்ன நீங்கான்; இங்கும் அத் தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏகப் போந்தான்; நம் குலத் தலைமை விட்டான்; நலப்பட்டான் தேவர்க்கு' என்றான். |
|
உரை
|
|
117. | 'என் செய்தாய் ? திண்ணா! நீ தான் என்ன மால் கொண்டாய் ? எங்கள் முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார் வன் பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி, மிக்க இன்பு உறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு. |
|
உரை
|
|
118. | கோலினில் கோத்துக் காய்ச்சிக் கொழும் தசை பதத்தில் வேவ, வாலிய சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கிப் பார்த்துச் சாலவும் இனிய எல்லாம் சருகு இலை இணைத்த கல்லை ஏலவே கோலிக் கூட அதன் மிசை இடுவார் ஆனார். |
|
உரை
|
|
119. | மருங்கு நின்றவர்கள் பின்னும் 'மயல் மிக முதிர்ந்தான் என்னே! அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான்; பெரும் பசி உடையன் ஏனும் பேச்சுஇலன்; எமக்கும் பேறு தரும் பரிசு உணரான், மற்றைத் தசை புறத்து எறியா நின்றான். |
|
உரை
|
|
120. | 'தேவு மால் கொண்டான் இந்தத் திண்ணன்; மற்று இதனைத் தீர்க்கல் ஆவது ஒன்று அறியோம்; தேவராட்டியை நாகனோடு மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும்; அவ் வேட்டைக் கானில் ஏவல் ஆட்களையும் கொண்டு போதும்.' என்று எண்ணிப் போனார். |
|
உரை
|
|
121. | கானவர் போனது ஓரார்; கடிதினில் கல்லையின் கண் ஊன் அமுது அமைத்துக் கொண்டு, மஞ்சனம் ஆட்ட உன்னி மா நதி நன்னீர் தூய வாயினில் கொண்டு, கொய்த தூநறும் பள்ளித் தாமம் குஞ்சி மேல் துதையக் கொண்டார். |
|
உரை
|
|
122. | தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கிக் கல்லைப் புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி, 'இனிய எம்பிரானார் சாலப் பசிப்பர்' என்று இரங்கி ஏங்கி், நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்தாம். |
|
உரை
|
|
123. | 'இளைத்தனர் நாயனார்' என்று ஈண்டச் சென்று எய்தி. வெற்பின் முளைத்து எழு முதலைக் கண்டு முடிமிசை மலரைக் காலில் வளைத்த பொன் செருப்பால் மாற்றி, வாயின் மஞ்சன நீர் தன்னை விளைத்த அன்பு உமிழ்வார் போல, விமலனார் முடிமேல் விட்டார். |
|
உரை
|
|
124. | தலை மிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடம் காளத்தி மலை மிசைத் தம்பிரானார் முடி மிசை வணங்கிச் சாத்திச் சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார் சேர்த்த கல்லை இலை மிசைப் படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து. |
|
உரை
|
|
125. | 'கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு அழல் உறு பதத்தில் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி நாவில் பழகிய இனிமை பார்த்துப் படைத்த இவ் இறைச்சி சால அழகிது; நாயனீரே! அமுது செய்து அருளும்' என்றார். |
|
உரை
|
|
126. | அன்ன இம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர் மன்னனார், 'திருக் காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன் இன்னமும் வேண்டும்' என்னும் எழு பெரும் காதல் கண்டு, பல் நெடும் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் தாழ்ந்தான். |
|
உரை
|
|
127. | அவ் வழி அந்தி மாலை அணைதலும் 'இரவு சேரும் வெவ் விலங்கு உள' என்று அஞ்சி, மெய்ம்மையின் வேறு கொள்ளாச் செவ்விய அன்பு தாங்கித் திருக் கையில் சிலையும் தாங்கி், மை வரை என்ன ஐயர் மருங்கு நின்று அகலா நின்றார். |
|
உரை
|
|
128. | சார்வு அருந் தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும் கார் வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார் தம்மை ஆர்வம் முன் பெருக, ஆரா அன்பினில் கண்டு கொண்டே நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார். |
|
உரை
|
|
129. | கழை சொரி தரளக் குன்றின் கதிர் நிலவு ஒருபால் பொங்க, முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒருபால் மொய்ப்பத் தழை கதிர்ப் பரிதியோடும் சந்திரன் தலை உவாவில் குழை அணி காதர் வெற்பைக் கும்பிடச் சென்றால் ஒக்கும். |
|
உரை
|
|
130. | விரவு பல் மணிகள் கான்ற விரிகதிர்ப் படலை பொங்க, மரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி பொர இரு சுடருக்கு அஞ்சிப் போயின புடைகள் தோறும் இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது, எங்கும் எங்கும். |
|
உரை
|
|
131. | செந் தழல் ஒளியில் பொங்கும் தீப மா மரங்களாலும் மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும் ஐந்தும் ஆறு அடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும் எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை. |
|
உரை
|
|
132. | வரும் கறைப் பொழுது நீங்கி மல்கிய யாமம் சென்று சுருங்கிட, அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டுக் கருங்கடல் என்ன நின்று கண் துயிலாத வீரர் அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி. |
|
உரை
|
|
133. | ஏறு கால் பன்றியோடும் இருங் கலை, புன மான், மற்றும், வேறு வேறு இனங்கள் வேட்டை வினைத் தொழில் விரகினாலே ஊறு செய் காலம் சிந்தித்து, உருமிகத் தெரியாப் போதின் மாறு அடு சிலையும் கொண்டு, வள்ளலைத் தொழுது போந்தார். |
|
உரை
|
|
134. | மொய் காட்டும் இருள் வாங்கி முகம் காட்டும் தேர் இரவி மெய் காட்டும் அன்புடைய வில்லியார் தனி வேட்டை எய் காட்டின் மா வளைக்க இட்ட கரும் திரை எடுத்துக் கை காட்டும் வான் போலக் கதிர் காட்டி எழும் போதில். |
|
உரை
|
|
135. | எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்பக் கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார்; மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழி பாடு செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவ கோசரியார். |
|
உரை
|
|
136. | வந்து திருமலையின் கண் வானவர் நாயகர் மருங்கு சிந்தை நியமத்தோடும் செல் கின்றார்; திரு முன்பு வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடி, 'இந்த அனுசிதம் கெட்டேன்! யார் செய்தார் ?' என்று அழிவார். |
|
உரை
|
|
137. | 'மேவநோவா அஞ்சா வேடுவரே இது செய்தார் தேவ தேவ ஈசனே! திருமுன்பே இது செய்து போவதே ? இவ் வண்ணம் புகுத நீர் திரு உள்ளம் ஆவதே ? எனப் பதறி அழுது விழுந்து அலமந்தார். |
|
உரை
|
|
138. | 'பொருப்பில் எழும் சுடர்க் கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான் இருப்பது இனி என் ?' என்று அவ் இறைச்சி எலும்புடன் இலையும் செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின், விருப்பின் ஒடும் திருமுகலிப் புனல் மூழ்கி விரைந்து அணைந்தார். |
|
உரை
|
|
139. | பழுது புகுந்தது தீரப் பவித்திரமாம் செயல் புரிந்து, தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி், வழுவில் திரு மஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை முழுதும் முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார். |
|
உரை
|
|
140. | பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால் துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர்த் திங்கள் அணிந்த சடை முடிக் கற்றை அங்கணரை விடை கொண்டு, தணிந்த மனத் திருமுனிவர் தபோ வனத்தினிடைச் சார்ந்தார். |
|
உரை
|
|
141. | இவ் வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனி இப்பால் மை வண்ணக் கரும் குஞ்சி வன வேடர் பெருமானார் கை வண்ணச் சிலை வளைத்துக் கான் வேட்டை தனி ஆடிச் செய் வண்ணத் திறம் மொழிவேன் தீவினையின் திறம் ஒழிவேன். |
|
உரை
|
|
142. | திரு மலையின் புறம் போன திண்ணனார் செறி துறுகல் பெருமலைகள் இடைச் சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்து வருவனவும் துணி படுத்து, மான் இனங்கள் கான் இடை நின்று ஒரு வழிச் சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி. |
|
உரை
|
|
143. | பயில் விளியால் கலை அழைத்துப் பாடு பெற ஊடு உருவும் அயில் முக வெங் கணை போக்கி, அடி ஒற்றி மரை இனங்கள் துயில் இடையின் இடை எய்து, தொடர்ந்து கடமைகள் எய்து, வெயில் படு வெங்கதிர் முதிரத் தனி வேட்டை வினை முடித்தார். |
|
உரை
|
|
144. | பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல் இட்டு, அருகு தீக் கடை கோல் இரும் சுரிகை தனை உருவி வெட்டி, நறுங் கோல் தேனும் மிக முறித்துத் தேக்கு இலையால் வட்டமுறு பெருங் கல்லை மருங்கு புடை பட அமைத்தார். |
|
உரை
|
|
145. | இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில் வெந் தழலைப் பிறப்பித்து மிக வளர்த்து, மிருகங்கள் கொந்தி, அயில் அலகம்பால் குட்டம் இட்டுக் கொழுப்பரிந்து வந்தன கொண்டு, எழும் தழலில் வக்குவன வக்குவித்து. |
|
உரை
|
|
146. | வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின் ஆய உறுப்பு இறைச்சி யெலாம் அரிந்து ஒருகல்லையில் இட்டுக் காய நெடும் கோல் கோத்துக் கனலின் கண் உறக்காய்ச்சித் தூய திரு அமுது அமைக்கச் சுவை காணல் உறுகின்றார். |
|
உரை
|
|
147. | எண் இறந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும் வண்ண எரி வாயின் கண் வைத்தது எனக் காளத்தி அண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பார்போல், திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது. |
|
உரை
|
|
148. | நல்ல பதம் உற வெந்து நாவின் கண் இடும் இறைச்சி கல்லையினில் படைத்துத் தேன் பிழிந்து கலந்து அது கொண்டு. வல் விரைந்து திருப் பள்ளித் தாமமும் தூ மஞ்சனமும் ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார். |
|
உரை
|
|
149. | வந்து திருக் காளத்தி மலை ஏறி, வனசரர்கள் தம் தலைவனார் இமையோர் தலைவனார் தமை எய்தி, அந்தணனார் பூசையினை முன்பு போல் அகற்றிய பின் முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார். |
|
உரை
|
|
150. | ஊன் அமுது கல்லை யுடன் வைத்து, 'இது முன்னையின் நன்றால்; ஏனமொடு மான், கலைகள், மரை, கடமை இவை இற்றில் ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன்; தேனும் உடன் கலந்து இது, தித்திக்கும்' என மொழிந்தார். |
|
உரை
|
|
151. | இப் பரிசு திரு அமுது செய்வித்துத் தம் உடைய ஒப்பரிய பூசனை செய்து அந் நெறியில் ஒழுகுவார் எப்பொழுதும் மேல் மேல் வந்து எழும் அன்பால் காளத்தி அப்பர் எதிர் அல் உறங்கார்; பகல் வேட்டை ஆடுவார். |
|
உரை
|
|
152. | மா முனிவர் நாள் தோறும் வந்து அணைந்து வன வேந்தர் தாம் முயலும் பூசனைக்குச் சால மிகத் தளர்வு எய்தித் தீமை என அது நீக்கிச் செப்பிய ஆகம விதியால் ஆம் முறையில் அர்ச்சனை செய்து அந் நெறியில் ஒழுவார் ஆல். |
|
உரை
|
|
153. | நாணனொடு காடனும் போய் நாகனுக்குச் சொல்லியபின் ஊணும் உறக்கமும் இன்றி, அணங்கு உறைவாளையும் கொண்டு, பேணூம் மகனார் தம் பால் வந்து எல்லாம் பேதித்துக் காணும் நெறி தங்கள் குறி வாராமல் கை விட்டார். |
|
உரை
|
|
154. | முன்பு திருக் காளத்தி முதல்வனார் அருள் நோக்கால் இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கைத் தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற அன்பு பிழம் பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவின் அரோ! |
|
உரை
|
|
155. | அந் நிலையில் அன்பனார் அறிந்த நெறி பூசிப்ப மன்னிய ஆகமப் படியால் மாமுனிவர் அருச்சித்து 'இங்கு என்னுடைய நாயகனே! இது செய்தார் தமைக் காணேன்; உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும்' என. |
|
உரை
|
|
156. | அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர் தம்பாலே மின் திகழும் சடை மவுலி வேதியர் தாம் எழுந்து அருளி, 'வன் திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல்; நன்று அவன் தன் செயல் தன்னை நாம் உரைப்பக் கேள்' என்று. |
|
உரை
|
|
157. | 'அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு; என்றும் அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு; என்றும் அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம்; என்றும் அவனுடைய நிலை இவ்வாறு; அறிநீ' என்று அருள் செய்தார். |
|
உரை
|
|
158. | பொருப்பினில்வந்து அவன்செய்யும் பூசனைக்கு முன்பு என் மேல் அருப்பஉறும்மென் மலர்முன்னை அவைநீக்கும் ஆதரவால் விருப்புஉறும்அன்பு எனும்வெள்ளக் கால்பெருகிற்று என வீழ்ந்த செருப்புஅடிஅவ் இளம்பருவச் சேய்அடியின் சிறப்பு உடைத்தால். |
|
உரை
|
|
159. | உருகிய அன்பு ஒழிவுஇன்றி நிறைந்தஅவன் உருஎன்னும் பெருகியகொள் கலமுகத்தில் பிறங்கி இனிது ஒழுகுதலால் ஒருமுனிவன் செவி உமிழும் உயர்கங்கை முதல்தீர்த்தப் பொருபுனலின் எனக்குஅவன்தன் வாய்உமிழும் புனல்புனிதம். |
|
உரை
|
|
160. | இம் மலைவந்து எனைஅடைந்த கானவன் தன் இயல்பாலே மெய்ம்மலரும் அன்புமேல் விரிந்தனபோல் விழுதலால் செம்மலர்மேல் அயனொடுமால் முதல்தேவர் வந்துபுனை எம்மலரும் அவன்தலையால் இடுமலர்போல் எனக்குஒவ்வா. |
|
உரை
|
|
161. | வெய்யகனல் பதம்கொள்ள வெந்துளதோ எனும்அன்பால் நையும் மனத்து இனிமையினில் நையமிக மென்றிடலால் செய்யும்மறை வேள்வியார் முன்புதரும் திருந்து அவியில் எய்யும்வரிச் சிலையவன்தான் இட்டஊன் எனக்கு இனிய. |
|
உரை
|
|
162. | மன்பெருமா மறைமொழிகள் மாமுனிவர் மகிழ்ந்து உரைக்கும் இன்ப மொழித் தோத்திரங்கள் மந்திரங்கள் யாவையினும் முன்பு இருந்து மற்று அவன் தன் முகம் மலர அகம் நெகிழ அன்பில் நினைந்து எனையல்லால் அறிவுறா மொழிநல்ல. |
|
உரை
|
|
163. | 'உனக்கு அவன் தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால் எனக்கு அவன் தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய்; மனக் கவலை ஒழிக' என்று. மறை முனிவர்க்கு அருள் செய்து, புனல் சடிலத் திரு முடியார் எழுந்து அருளிப் போயினார். |
|
உரை
|
|
164. | கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குல் இடைப் புனை தவத்து மா முனிவர் புலர் அளவும் கண் துயிலார்; மனம் உறும் அற்புதம் ஆகி, வரும் பயமும் உடன் ஆகித் துனை புரவித் தனித் தேர் மேல் தோன்றுவான் கதிர் தோன்ற. |
|
உரை
|
|
165. | முன்னை நாள் போல் வந்து திருமுகலிப் புனல் மூழ்கிப் பன் முறையும் தம்பிரான் அருள் செய்த படி நினைந்து, மன்னு திருக் காளத்தி மலை ஏறி, முன்பு போல் பிஞ்ஞகனைப் பூசித்துப் பின்பாக ஒளித்திருந்தார். |
|
உரை
|
|
166. | கரு முகில் என்ன நின்ற கண் படா வில்லியார் தாம் வரு முறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த காலை, அருமறை முனிவனார் வந்து அணை வதன் முன்பு போகித் தருமுறை முன்பு போலத் தனிப் பெரு வேட்டை ஆடி. |
|
உரை
|
|
167. | மாறு இல் ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலும் சென்னி ஏறு நாள் மலரும் வெவ் வேறு இயல்பினில் அமைத்துக் கொண்டு, தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்தி ஆறு சேர் சடையார் தம்மை அணுக வந்து அணையா நின்றார், |
|
உரை
|
|
168. | 'இத்தனை பொழுது தாழ்த்தேன்' என விரைந்து ஏகுவார் முன், மொய்த்த பல் சகுனம் எல்லாம் முறை முறை தீங்கு செய்ய, 'இத் தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரம் காட்டும்; அதனுக்கு என் கொல் ? கெட்டேன்! அடுத்தது' என்று அணையும் போதில். |
|
உரை
|
|
169. | அண்ணலார் திருக் காளத்தி அடிகளார் முனிவன் ஆர்க்குத் திண்ணனார் பரிவு காட்டத் திரு நயனத்தில் ஒன்று துண் என உதிரம் பாய இருந்தனர்; தூரத்தே அவ் வண்ண வெஞ் சிலையார் கண்டு, வல் விரைந்து ஓடி வந்தார். |
|
உரை
|
|
170. | வந்தவர் குருதி கண்டார்; மயங்கினார்; வாயில் நல் நீர் சிந்திடக் கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழக் கொந்து அலர் பள்ளித் தாமம் குஞ்சி நின்று அலைந்து சோரப் பைந் தழை அலங்கல் மார்பர் நிலத்து இடைப் பதைத்து வீழ்ந்தார். |
|
உரை
|
|
171. | விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர்; குருதி வீழ்வது ஒழிந்திடக் காணார்; செய்வது அறிந்திலர்; உயிர்த்து மீள அழிந்து போய் வீழ்ந்தார்; தேறி; யார் இது செய்தார்' என்னா எழுந்தனர்; திசைகள் எங்கும் பார்த்தனர்; எடுத்தார் வில்லும். |
|
உரை
|
|
172. | வாளியும் தெரிந்து கொண்டு, 'இம் மலை இடை எனக்கு மாறா மீளி வெம் மறவர் செய்தார் உளர் கொலோ ? விலங்கின் சாதி ஆளி முன்னாகி யுள்ள விளைத்தவோ ? அறியேன்' என்று, நீள் இரும் குன்றைச் சாரல் நெடிது இடை நேடிச் சென்றார். |
|
உரை
|
|
173. | வேடரைக் காணார் தீய விலங்குகள் மருங்கும் எங்கும் நாடியும் காணார் மீண்டும் நாயனார் தம்பால் வந்து, நீடிய சோகத்தோடு நிறை மலர்ப் பாதம் பற்றி், மாடு உறக் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணீர் வார. |
|
உரை
|
|
174. | 'பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ ? ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ ? மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ ? ஆவது ஒன்று அறிகிலேன்; யான் என் செய்கேன் ? என்று பின்னும். |
|
உரை
|
|
175. | 'என் செய்தால் தீருமோ தான் எம்பிரான் திறத்துத் தீங்கு முன் செய்தார் தம்மைக் காணேன்; மொய் கழல் வேடர் என்றும் மின் செய்வார் பகழிப் புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடிப் பொன் செய் தாழ் வரையில் கொண்டு வருவன் நான்' என்று போனார். |
|
உரை
|
|
176. | நினைத்தனர் வேறு வேறு நெருங்கிய வனங்கள் எங்கும் இனத்திடைப் பிரிந்த செங்கண் ஏறு என வெருக் கொண்டு எய்திப் புனத்து இடைப் பறித்துக் கொண்டு பூத நாயகன்பால் வைத்த மனத்தினும் கடிது வந்து அம் மருந்துகள் பிசைந்து வார்த்தார். |
|
உரை
|
|
177. | மற்று அவர் பிசைந்து வார்த்த மருந்தினால் திருக் காளத்திக் கொற்றவர் கண்ணில் புண் நீர் குறை படாது இழியக் கண்டும் 'இற்றையின் நிலைமைக்கு என்னோ' இனிச் செயல் என்று பார்ப்பார்; 'உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன்' எனும் உரைமுன் கண்டார். |
|
உரை
|
|
178. | 'இதற்கு இனி என் கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண் அதற்கு இது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கும்' என்று, மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து, தம் கண் முதல் சரம் அடுத்து வாங்கி, முதல்வர் தம் கண்ணில் அப்ப. |
|
உரை
|
|
179. | நின்ற செங் குருதி கண்டார்; நிலத்தின் நின்று ஏறப் பாய்ந்தார்; குன்று என வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி 'நன்று நான் செய்த இந்த மதி' என நகையும் தோன்ற, ஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார். |
|
உரை
|
|
180. | வலத்திருக் கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார் தம் நலத்தினைப் பின்னும் காட்ட, நாயனார் மற்றைக் கண்ணில் உலப்பில் செங் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர் குலப் பெரும் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார். |
|
உரை
|
|
181. | கண்டபின் 'கெட்டேன்! எங்கள் காளத்தியார் கண் ஒன்று புண் தரு குருதி நிற்க, மற்றைக் கண் குருதி பொங்கி மண்டும் மற்று இதனுக்கு அஞ்சேன்; மருந்து கை கண்டேன்; இன்னும் உண்டு ஒரு கண் அக் கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன்; என்று. |
|
உரை
|
|
182. | கண்ணுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பின் காணும் நேர்பாடு எண்ணுவார்; தம்பிரான் தன் திருக் கண்ணில் இடக்கால் ஊன்றி, உள் நிறை விருப்பினோடும் ஒரு தனிப் பகழி கொண்டு, திண்ணனார் கண்ணில் ஊன்றத் தரித்திலர் தேவ தேவர். |
|
உரை
|
|
183. | செங் கண் வெள் விடையின் பாகர்; திண்ணனார் தம்மை ஆண்ட அங் கணர் திருக் காளத்தி அற்புதர் திருக்கை அன்பர் தம் கண் முன் இடக்கும் கையைத் தடுக்க, மூன்று அடுக்கு நாக கங்கணர் அமுதவாக்குக் 'கண்ணப்ப நிற்க' என்ற. |
|
உரை
|
|
184. | கானவர் பெருமானார் தம் கண் இடந்து அப்பும் போதும் ஊனமுது உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும் ஞான மா முனிவர் கண்டார்; நான்முகன் முதலாய் உள்ள வானவர் வளர் பூமாரி பொழிந்தனர்; மறைகள் ஆர்ப்ப. |
|
உரை
|
|
185. | பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திருக் கண்ணில் வந்த ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்து அப்ப உதவும் கையை ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு' என் வலத்தில் மாறு இலாய்! நிற்க' என்று, மன்னு பேர் அருள் புரிந்தார். |
|
உரை
|
|
186. | மங்குல் வாழ் திருக் காளத்தி மன்னனார் கண்ணில் புண் நீர் தங் கணால் மாற்றப் பெற்ற தலைவர் தாள் தலைமேல் கொண்டே, கங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில் கலய னாராம் பொங்கிய புகழின் மிக்கார் திருத் தொண்டு புகலல் உற்றேன். |
|
உரை
|