தொடக்கம் |
|
|
6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் 34. சோமாசி மாற நாயனார் புராணம் |
1. | சூதம் பயிலும் பொழில் அம்பரில் தூய வாய்மை வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர் ஏதம் புரியும் எயில் செற்றவர்க்கு அன்பர் வந்தால் பாதம் பணிந்துஆர் அமுது ஊட்டும் நல் பண்பின் மிக்கார். |
|
உரை
|
|
2. | யாழின் மொழியாள் தனிப் பாகரைப் போற்றும் யாகம் ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆன ஏழும் உவப்பப் புரிந்து இன்பு உறச் செய்த பேற்றால் 'வாழும் திறம் ஈசர் மலர்க் கழல் வாழ்த்தல்' என்பார். |
|
உரை
|
|
3. | எத்தன்மையர் ஆயினும் 'ஈசனுக்கு அன்பர்' என்றால் 'அத் தன்மையர் தாம் நமை ஆள்பவர்' என்று கொள்வார்; 'சித்தம் தெளியச் சிவன் அஞ்சு எழுத்து ஓதும் வாய்மை நித்தம் நியமம்' எனப் போற்றும் நெறியில் நின்றார். |
|
உரை
|
|
4. | சீரும் திருவும் பொழியும் திருவாரூர் எய்தி ஆரம் திகழ் மார்பின் அணுக்க வன்தொண்டர்க்கு அன்பால் சாரும் பெரு நண்பு சிறப்ப அடைந்து தங்கிப் பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றி உள்ளார். |
|
உரை
|
|
5. | துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம் வென்று 'இங்கு இது நல்நெறி சேரும் விளக்கம்' என்றே வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப என்றும் நிலவும் சிவலோ கத்தில் இன்பம் உற்றார். |
|
உரை
|
|
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி |
6. | பணையும் தடமும் புடை சூழும் ஒற்றியூரில் பாகத்தோர் துணையும் தாமும் பிரியாதார் தோழத் தம்பிரானாரை இணையும் கொங்கைச் சங்கிலியார் எழில் மென் பணைத் தோள் எய்துவிக்க அணையும் ஒருவர் சரணமே அரணம் ஆக அடைந்தோமே. |
|
உரை
|