தொடக்கம் |
|
|
8. பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் 47. சத்தி நாயனார் புராணம் |
1. | களமர் கட்ட கமலம் பொழிந்த தேன் குளம் நிறைப்பது; கோல் ஒன்றில் எண் திசை அளவும் ஆணைச் சயத் தம்பம் நாட்டிய வளவர் காவிரி நாட்டு வரிஞ்சை ஊர். |
|
உரை
|
|
2. | வரிஞ்சை ஊரினில் வாய்மை வேளாண் குலம் பெரும் சிறப்புப் பெறப் பிறப்பு எய்தினார் விரிஞ்சன் மால்முதல் விண்ணவர் எண்ணவும் அரும் சிலம்பு அணி சேவடிக்கு ஆள் செய்வார். |
|
உரை
|
|
3. | அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை இத்தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை வைத்த நாவை வலித்து அரி சத்தியால் சத்தியார் எனும் திருநாமமும் தாங்கினார். |
|
உரை
|
|
4. | தீங்கு சொற்ற திருஇலர் நாவினை வாங்க வாங்கும் தண்டாயத்தினால் வலித்து ஆங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன் ஓங்கு சீர்த் தொண்டின் உயர்ந்தனர். |
|
உரை
|
|
5. | அன்னது ஆகிய ஆண்மைத் திருப்பணி மன்னு பேர் உலகத்தில் வலி உடன் பல்நெடும் பெருநாள் பரிவால் செய்து சென்னி ஆற்றினர் செந்நெறி ஆற்றினர். |
|
உரை
|
|
6. | ஐயம் இன்றி அரிய திருப்பணி மெய்யினால் செய்த வீரத் திருத்தொண்டர் வையம் உய்ய மணிமன்றுள் ஆடுவார் செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர். |
|
உரை
|
|
7. | நாயனார் தொண்டரை நலம் கூறலார் சாய நா அரி சத்தியார் தாள் பணிந்து ஆய மா தவத்து ஐயடிகள் எனும் தூய காடவர் தம் திறம் சொல்லுவாம். |
|
உரை
|