Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
8. பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
48. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்
1.வைய நிகழ் பல்லவர் தம் குலமரபின் வழித்தோன்றி
வெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கிச்
செய்ய சடையர் சைவத் திரு நெறியால் அரசு அளிப்பார்;
ஐயடிகள்; நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார்.
உரை
2.திருமலியும் புகழ் விளங்கச் சேண் நிலத்தில் எவ் உயிரும்
பெருமையுடன் இனிது அமரப் பிற புலங்கள் அடிப்படுத்துத்
தருமநெறி தழைத்து ஓங்கத் தாரணிமேல் சைவமுடன்
அருமறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில்.
உரை