தொடக்கம் |
|
|
10. கடல் சூழ்ந்த சருக்கம் 55. இடங்கழி நாயனார் புராணம் |
1. | எழும் திரை மா கடல் ஆடை இரு நிலமா மகள் மார்பில் அழுந்து பட எழுதும் இலைத் தொழில் தொய்யில் அணியினவாம் செழும் தளிரின் புடை மறைந்த பெடை களிப்பத் தேமாவின் கொழும் துணர் கோதிக் கொண்டு குயில் நாடு கோநாடு. |
|
உரை
|
|
2. | முருகுஉறு செங்கமல மதுமலர் துதைந்த மொய் அளிகள் பருகுஉறு தெண் திரை வாவிப் பயில் பெடையோடு இரை அருந்தி வருகுஉறு தண் துளி வாடை மறைய மாதவிச் சூழல் குருகு உறங்கும் கோன் நாட்டுக் கொடி நகரம் கொடும்பாளூர். |
|
உரை
|
|
3. | அந் நகரத்தினில் இருக்கும் வேளிர் குலத்து அரசு அளித்து மன்னிய பொன் அம்பலத்து மணி முகட்டில் பாக் கொங்கின் பன்னு துலைப் பசும் பொன்னால் பயில் பிழம்பாம் மிசை அணிந்த பொன் நெடும் தோள் ஆதித்தன் புகழ் மரபின் குடி முதலோர். |
|
உரை
|
|
4. | இடம் கழியார் என உலகில் ஏறு பெரு நாமத்தார்; அடங்கு அலர் முப்புரம் எரித்தார் அடித்தொண்டின் நெறி அன்றி முடங்கு நெறி கனவினிலும் முன்னாதார் எந்நாளும் தொடர்ந்த பெரும் காதலினால் தொண்டர் வேண்டிய செய்வார். |
|
உரை
|
|
5. | சைவ நெறி வைதிகத்தின் தரும நெறியொடும் தழைப்ப மை வளரும் திருமிடற்றார் மன்னிய கோயில்கள் எங்கும் மெய் வழிபாட்டு அர்ச்சனைகள் விதிவழிமேல் மேல் விளங்க மொய் வளர் வண் புகழ் பெருக முறை புரியும் அந்நாளில். |
|
உரை
|
|
6. | சங்கரன் தன் அடியாருக்கு அமுது அளிக்கும் தவம் உடையார் அங்கு ஒருவர், அடியவருக்கு அமுது ஒரு நாள் ஆக்க உடன் எங்கும் ஒரு செயல் காணாது எய்திய செய்தொழில் முட்டப் பொங்கி எழும் பெரு விருப்பால் புரியும் வினை தெரியாது. |
|
உரை
|
|
7. | அரசர் அவர் பண்டாரத்து அந்நாட்டின் நெல் கூட்டின் நிரை செறிந்த புரிபலவாம் நிலைக் கொட்ட காரத்தில் புரை செறி நல் இருளின் கண் புக்கு முகந்து எடுப்பவரை முரசு எறி காவலர் கண்டு பிடித்து அரசன் முன் கொணர்ந்தார். |
|
உரை
|
|
8. | மெய்த்தவரைக் கண்டு இருக்கும் வேல் மன்னர் வினவுதலும் 'அத்தன் அடியாரை யான் அமுது செய்விப்பது முட்ட இத் தகைமை செய்தேன்' என்று இயம்புதலும் மிக இரங்கிப் பத்தரை விட்டு 'இவர் அன்றோ பண்டாரம் எனக்கு' என்பார். |
|
உரை
|
|
9. | நிறை அழிந்த உள்ளத்தால் 'நெல் பண்டாரமும் அன்றிக் குறைவு இல் நிதிப் பண்டாரம் ஆன எலாம் கொள்ளை முகந்து இறைவன் அடியார் கவர்ந்து கொள்க' என எம்மருங்கும் பறை அறையப் பண்ணுவித்தார்; படைத்த நிதிப்பயன் கொள்வார். |
|
உரை
|
|
10. | எண்ணிஇல் பெரும் பண்டாரம் ஈசன் அடியார் கொள்ள உள் நிறைந்த அன்பினால் உறு கொள்ளை மிக ஊட்டித் தண் அளியால் நெடும் காலம் திருநீற்றின் நெறி தழைப்ப மண்ணில் அருள் புரிந்து இறைவர் மலர் அடியின் நிழல் சேர்ந்தார். |
|
உரை
|
|
11. | மை தழையும் மணி மிடற்றார் வழித்தொண்டின் வழிபாட்டில் எய்து பெரும் சிறப்பு உடைய இடங்கழியார் கழல் வணங்கி, மெய் தருவார் நெறி அன்றி வேறு ஒன்றும் மேல் அறியாச் செய்தவராம் செருத்துணையார் திருத்தொண்டின் செயல் மொழிவாம். |
|
உரை
|