தொடக்கம் |
|
|
10. கடல் சூழ்ந்த சருக்கம் 57. புகழ்த்துணை நாயனார் புராணம் |
1. | செருவிலிபுத்தூர் மன்னும் சிவ மறையோர் திருக்குலத்தார்; அருவரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்கு ஒருவர் தமை நிகர் இல்லார்; உலகத்துப் பரந்து ஓங்கிப் பொருவரிய புகழ் நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார். |
|
உரை
|
|
2. | தம் கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடும் நாள் பொங்கு ஓத ஞாலத்து வற்கடமாய்ப் பசி புரிந்தும் 'எம் கோமான் தனை விடுவேன் அல்லேன்' என்று இராப் பகலும் கொங்குஆர் பன் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார். |
|
உரை
|
|
3. | மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுது சால உறு பசிப்பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்திக் கோல நிறை புனல் தாங்கு குடம் தாங்க மாட்டாமை ஆலம் அணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார். |
|
உரை
|
|
4. | சங்கரன் தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடைய அங் கணனும் களவின்கண் அருள் புரிவான் 'அருந்தும் உணவு மங்கிய நாள் கழி அளவும் வைப்பது நித்தமும் ஒரு காசு இங்கு உனக்கு நாம்' என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார். |
|
உரை
|
|
5. | பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின் கீழ் ஒரு காசு அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும் மற்று அது கைக்கொண்டு உற்ற பெரும் பசி அதனால் உணங்கும் உடம்பு உடன் உவந்து முற்றும் உணர்வு தலை நிரம்ப முகம் மலர்ந்து களி கூர்ந்தார். |
|
உரை
|
|
6. | அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு அது கொண்டே இன்னாத பசிப் பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின் மின் ஆர் செஞ்சடையார்க்கு மெய் அடிமைத்தொழில் செய்து பொன்நாட்டின் அமரர் தொழப் புனிதர் அடிநிழல் சேர்ந்தார். |
|
உரை
|
|
7. | பந்து அணையும் மெல் விரலாள் பாகத்தார் திருப் பாதம் வந்து அணையும் மனத் துணையார் புகழ்த்துணையார் கழல் வாழ்த்திச் சந்தம் அணியும் மணிப் புயத்துத் தனிவீரர் ஆம் தலைவர் கொந்து அணையும் மலர் அலங்கல் கோட்புலியார் செயல் உரைப்பாம். |
|
உரை
|