|
11. பத்தராய்ப் பணிவார் சருக்கம் 62. திருவாரூர்ப் பிறந்தார் புராணம் |
1. | அருவாகி உருவாகி அனைத்தும் ஆய் நின்ற பிரான் மரு ஆரும் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும் திரு ஆரூர்ப் பிறந்தார்கள் திருத் தொண்டு தெரிந்து உணர ஒரு வாயால் சிறியேன் ஆல் உரைக்கலாம் தகைமை அதோ. |
|
உரை
|