தொடக்கம் |
|
|
12. மன்னிய சீர்ச் சருக்கம் 68. நேச நாயனார் புராணம் |
1. | சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றா நார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும் பார் வளர் புகழின் மிக்க பழம்பதி; மதி தோய் நெற்றிக் கார்வளர் சிகர மாடக் காம்பீலி என்பது ஆகும். |
|
உரை
|
|
2. | அந் நகர் அதனில் வாழ்வார்; அறுவையர் குலத்து வந்தார்; மன்னிய தொழிலில் தங்கள் மரபில் மேம்பாடு பெற்றார்; பன்னக ஆபரணர்க்கு அன்பர் பணி தலைக்கொண்டு பாதம் சென்னியால் கொண்டு போற்றும் தேசினார்; நேசர் என்பார். |
|
உரை
|
|
3. | ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடிப்போதுக்கு ஆக்கி ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு எழுத்துக்கு ஆக்கி, தாங்கு கைத்தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்கு ஆகப் பாங்கு உடை உடையும் கீளும் பழுதுஇல் கோவணமும் நெய்வார். |
|
உரை
|
|
4. | உடையொடு நல்ல கீளும் ஒப்பு இல் கோவணமும் நெய்து, விடையவர் அடியார் வந்து வேண்டு மாறு ஈயும் ஆற்றால் இடை அறாது அளித்து, நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்தி, அடைவு உறு நலத்தர் ஆகி, அரன் அடி நீழல் சேர்ந்தார். |
|
உரை
|
|
5. | கற்றை வேணி முடியார் தம் கழல் சேர்வதற்குக் கலந்த வினை செற்ற நேசர் கழல் வணங்கிச் சிறப்பால் முன்னைப் பிறப்பு உணர்ந்து பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்ட கொற்ற வேந்தர் கோச்செங் கண் சோழர் பெருமை கூறுவாம். |
|
உரை
|