4 | ஆ. | ++முதல்நிலைத் தனிவினை வினையெச்சமாதல் |
வரிப்புனைபந்து (முருகு. 68) - [வரி - வரிந்து] அறுவேறு வகையின் (முருகு. 58) - [அறு - அற்று] பாலறிவந்த (தொ.சொ. 162) - [அறி - அறிய] சாக்குத்தினான் - சா - சாவ] ‘செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்.’ - கு. 466 [செய்தக்க - செய்யத்தக்க] ‘மண்மாண்புனை பாவை அற்று’. - கு. 407 [மாண்புனை - மாட்சிமைப்படப்புனை] - இவை வரிந்து அற்று அறிய சாவ செய்ய மாட்சிமைப்பட என்று பொருள்பட்டு வினையெச்சமானது காண்க. [வி-ரை: வரிப்புனைபந்து - வரிந்து புனை பந்து, அறுவேறு வகையின் - அற்று வேறு வகையின், பாலறிவந்த - பாலறிய வந்த, சாக்குத்தினான் - சாவக்குத்தினான், பொருதகர் - பொருத தகர், அடுபுலி - அட்டபுலி, சொற்பால் - சொல்லும் பகுதி, அறிகொன்று - அறிதலைக் கொன்று, கெடுவாகவையாது - கெடுதலாக வையாது எனப் பொருள்படுதல் காண்க. (பி.வி. 35 உரை).] 5 | அவ் வெச்சம் முற்றுக்களுள், முதல்நிலை பிரிந்தஅம் முதல்நிலைத் தொழிற்பெயர் வினைமுதல் ஆதியா வெவ்வேறு ஆதல்
|
‘கால காலனைக் காண்கின்ற போது காலனைத் துரத்தும்அக் காட்சி தானே.’ ‘கால காலனைக் கரிசுஅறக் காண்கின் காலனைத் துரத்தும்அக் காட்சி தானே.’ ‘கால காலனைக் காண்கின் றார்தமக்கு ஓர்வீடு அளிக்கும்அக் காட்சிஈது உண்மை.’ -இவற்றுள் மூன்றினும் நின்ற (காட்சி என்ற சொல்) முதல்நிலை பிரிந்து தொழிற்பெயராய் வினைமுதலான காண்க.
+ நன்னூல்317. முனிவர் உரை. |