பக்கம் எண் :

228இலக்கணக் கொத்து 

‘உடுப்பது, உண்பது’                                               - கு. 166

‘இல்வாழ்வான் என்பான்’                                           - கு. 41

- இவை செயப்படுபொருள்.

‘வேல் அன்றி வென்றி தருவது’                                     - கு. 546

‘வெல்வது அரண்’                                                - கு. 748

- இவை கருவி,

‘விளைவது நாடு’                                                 - கு. 732

யாம் இருப்பது உறையூர்

- இவை இடம்.

‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு’                                         - கு. 339

‘பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை’                                - கு. 61

- உறங்குவது, விழிப்பது, அறிவது - இவை தொழிற் பெயர்.

இங்ஙனம் முறையே வினைமுற்றுப் பெயர் இவ்வைந்தாதல் காண்க.

வி-ரை: பிரயோக விவேகம் 37ஆம் காரிகையுரையுள், ‘‘வினைமுற்றுப் பெயராகிய கிருதந்தம் கருத்தா ஆதியாதல் முதலாக ரூப பேதம் பொருந்தல் ஈறாக ஒன்பது இலக்கணமும் பெறும் என்றவாறு. ‘ஆதி என்றமையால் கருமமும், பாவமும், கரணமும், அதிகரணமும் கொள்க.

தார் தாங்கிச் செல்வது தானை’ - கு. 767 ‘வினையே செய்வது’ -தொ. சொ. 112 - என்னும் இரண்டும் அஃறிணையில் கருத்தாவான வினைமுற்றுப்பெயர்.

‘எடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்’                           -கு. 166

- இவ்விரண்டும் கருமமான வினைமுற்றுப்பெயர்.