பக்கம் எண் :

176இலக்கணக் கொத்து 

எ-டு:

பாலைக் குடித்தான் (ஒன்றே வந்தது);

பாலைத் தயிராக்கினான்;

குடும்பத்தைக் குற்றம் மறைத்தான்;

அரிசியால் சோறாக்கினான்;

மருகனுக்கு மகட் கொடுத்தான்;

- எனவரும்.

இவற்றின்கண் உருபு நோக்கிய சொல் இரண்டாகியவாறு

ஆகாயத்தின்கண் பருந்து, ஆகாயத்தின்கண் பறந்த பருந்து;

குன்றின்கண் குவடு, குன்றின்கண் இருந்த குவடு;

மெத்தைக்கண் அரசன், மெத்தைக்கண் கிடந்த அரசன்;

வழிக்கண் தூதன், வழிக்கண் நடந்த தூதன்;

-என வரும். இவற்றின்கண் ஒரு கால் ஒன்றும் ஒரு கால் இரண்டும் முடிக்கும் சொல்லாக வந்தவாறு. 50

உருபு நோக்கிய சொல் பல பொருள் படுதல்

63உருபுநோக் கியசொல் பலபொருள் படுதலை
முன்னோர் பலரும் மொழிந்தனர் விரியா;
இந்நூ லிற்சிறி தாயினும் இயம்பிலன்.

[வி-ரை: உருபை முடிக்கும் சொல் பற்றித் தொல்காப்பியனார் நன்னூலார் முதலாயினார் விரித்துக் கூறினமையின், அவற்றைப் பற்றி இந்நூலுள் குறிப்பிடவில்லை என்பது.

‘காப்பின் ஒப்பின்’ தொ.சொ.72. ‘இரண்டாவதன் உருபு ஐ’ ந. 296 முதலியன காண்க.]