| வினையியல் - நூற்பா எண். 2 | 181 |
‘ஆதி’ என்றதனால், அக் காட்சியால் பயன் உண்டு; அக் காட்சிக்கு இணை இல்லை; இவை போல்வன (காட்சியால், காட்சிக்கு என்றாற் போலத் தொழிற்பெயர் உருபு ஏற்றல்) எல்லாம் கொள்க. முதல்நிலையுமன்றித் தொழிற்பெயர் பிரிந்து வினை முதலாதலும் கொள்க. அது, ‘இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.’ - கு. 352 - என்புழி மாசறு காட்சியவர்க்கு அக்காட்சி இன்பம் பயக்கும் என்பதனால் காண்க. [வி-ரை: ‘‘இன்னும், ‘இருள் ... ... காட்சியவர்க்கு’ என் புழிக் காட்சியவர் என்னும் சாமானிய தத்திதனிற் காட்சி என்னும் பதம் பிரிந்து எழுவாயாய் நிற்பதும் கொள்க.’’ பி-வி. 35 உரை. பயக்கும் என்ற பயனிலைக்குக் காட்சி என்பதே எழுவாயாதல் காண்க.] 6 | முதல்நிலைத்தனிவினை, எட்டுருபு ஏற்றே எண்பொரு ளாதல்
|
இவ்வுரை பெருகிற்று - உரை. சொல்லைச் சேர்த்தான் - சொல். ஆயிரம் முடியை அவிழ்த்துநட்டான் - முடி. உரையால் அறிவித்தான் - உரை. இச்சொற்குப் பொருள் இது - சொல். இவ்வுரைக்குச் சொல் இது - உரை. மடியின் நீங்கி வாணிபம் செய்தான் - மடி. இச்சொல்லின் அறியலாம் இப்பொருள் - சொல். |