7. பலாமரம், பரணிமீன், மேடராசி.
| | [சிறப்புப் பொதுப் பெயர் முறையே சிறத்தல்.] | 8. அரசன் சோழன், பார்ப்பான் இராமன்.
| | [பொதுச் சிறப்புப் பெயர் முறையே பொருந்தல்.] | 9. மக்கட்சுட்டு, பழங்கறி, பழம்புளி, | | [பின்மொழி ஆகுபெயர் ஆதல்] | 10. குழற்பண், யாழ்ப்பண், குழல் இனிது யாழ்இனிது | | [முன்மொழி ஆகுபெயராதல்] |
11. புளிச்சுமை, கறிச்சுமை. -[இருமொழி ஆகுபெயராதல்] 12. அராஅப்பாம்பு, கன்னியாகுமரி -[ஒரு பொருட்டு இருபெயர்] ஆதல் 13. மன்னன் குமாரன் - [முற்பதம் தமிழ்மொழியாதல்.] 14. அதிநுட்பம் - [முற்பதம் வடமொழியாதல்.] 15. அழகப்பிரான் - [இருபதம் தமிழ்மொழி ஆதல்.] 16. ஆதிபகவன் - [இருபதம் வடமொழி ஆதல்.] என முறையே காண்க. ‘ஆதி’ என்றதனால், வண்ணம் - வடிவு - அளவு - சுவை முதலாகப் பலரும் எடுத்தோதினவும், அணியினுள் உருவகம் முதலியனவும் கொள்க. [வி-ரை: இராசி பன்னிரண்டனுள் மேடம் ஒன்று ஆதலின் மேடம் - சிறப்புப்பெயர்; இராசி - பொதுப்பெயர்; மக்கட்சுட்டு - சுட்டு என்பது ஆகுபெயராய்ச் சுட்டப்படும் பொருளையும், கறி என்பது ஆகுபெயராய்க் கறிசெய்யப்பட்ட காயையும், புளி என்பது ஆகுபெயராய்ப் புளியம்பழத்தையும் உணர்த்தின. குழல், யாழ் என்பன முறையே அவற்றினின்றும் எழும் ஒலியை உணர்த்தின. புளிச்சுமை, கறிச்சுமை - புளியம்பழமாகிய சுமக்கப்படும் பொருள். கறியாக்கப்படுவனவாகிய காயாகிய சுமக்கப்படும் பொருள் என இருமொழி ஆகுபெயர். |