நூற்பெயர்-இலக்கணக்கொத்து. யாப்பு-நவையறு விதிகள் கற்பவர்க்கு எளிதினில் புலப்படவே தொகுத்தமை. முதலியபொருள்-முன்னோர் இலக்கண இலக்கியங்களும் வட மொழி இலக்கணமும் கூறும் அரிய விதிகள். கேட்போர்-இந்நூல் புலக்கணத்தது என்னும் நன்மக்கள். பயன்-அரியவிதிகள் எளிதினில் புலப்படல். எளிய விதிகளைவிடுத்து அரிய விதிகளையே நிரலாக அமைத்துத் தாம் வரைந்த உரையால் எளிதில் புலப்படுத்தியுள்ளமை இந்நூல் முழுதும் காணப்படும். [பாயிரப் பகுதியாக அமைந்துள்ள முதல் பன்னிரு நூற்பாக் களையும் பாயிரவியல் என்று கொள்வோம்.] |