பக்கம் எண் :

 பாயிரவியல் - நூற்பா எண். 675

‘பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும்’                                           - தொ. சொ. 158

எனக் காரணமாகவும்,

‘கொடைஎதிர் கிளவி’                                         - தொ. சொ. 109

எனச் சம்பிரதானமாகவும்,

‘முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும்
இருமொழி மேலும் ஒருங்குஉடன் நிலையலும்’                     - தொ. சொ. 419

என அதிகரணமாகவும்,

‘அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்,                        - தொ. சொ. 316

‘ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல்’                           - தொ. சொ. 2

‘முதல்அறி கிளவி’, சினைஅறி கிளவி’                           - தொ. சொ. 115

‘அம்ம கேட்பிக்கும்’                                         - தொ. சொ. 278

எனக் கருத்தாவாகவும் சொல்லைக் கூறுவர். அவை யெல்லாம் உபசாரம் என்க.

‘கமம்நிறைந்த இயலும்’                                        - தொ. சொ. 355

‘உரு உட்குஆகும்’                                           - தொ. சொ. 302

‘செல்லல் இன்னல் இன்னா மையே’                             - தொ. சொ. 304

‘எல்லே விளக்கம்’                                           - தொ. சொ. 271

‘கொல்லே ஐயம்,                                            - தொ. சொ. 270

எனச்சொல்லும் பொருளும் பேதமிறின் அபேதமாகக் கூறுதலின், தொல்காப்பியருக்கும் அதுவே கருத்து என்க. இனி, சேனாவரையரும் சத்தநூலார் உரைத்தாங்கு உரைப்பர். நச்சினார்க்கினியர் சத்தநூலாரோடு மாறுபடச் சொல்லைப் பொருள் உணர்த்தற்குக் கருவி என்பர். தார்க்கிகர் சுவரூபசம்பந்தம் என்பர்.’ - பிர. விவே. 18 உரை