பக்கம் எண் :

134இலக்கணக் கொத்து 

பெறுதலே எனவும், ஆனவன் முதல் ஐம்பாற்சொல்லும் பெயர்ப் பின் அடைதலே எனவும் பலர் எழுவாய் வேற்றுமைக்கு உருபு வெவ்வேறு உரைத்தார் எனக்கூட்டியும் பொருள் செய்க]

1-5.எழுவாய் வேற்றுமைக்கு உருபே இன்று,
பெயரே, பயனிலை கொள்ளும் தன்மையே,
பயனிலை தன்னைக்கொண்ட தன்மையே,
வினைமுதல் ஆதலே

இவற்றுள், முன்நின்ற ஐந்தும் பலர் நூல்களாலும் பலர் உரைகளாலும் தெளியக் கிடந்தன. ஏனை மூன்றும் விளக்குகின்றாம்.

[வி-ரை: முன்நின்ற ஐந்தும் என்பன உருபே இன்று என்பது முதல் வினைமுதலாதல் ஈறாகக் கிடந்தன.

எழுவாய் வேற்றுமைக்கு உருபே இன்று என்பது தமிழ் நூலார் பலருக்கும் ஒப்ப முடிந்த கருத்தாம்.

எழுவாய் வேற்றமை பெயரே என்பதனை - தொல்காப்பியனார்,

‘எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே’                    தொ-சொ. 65

என்பதனாலும், நன்னூலார்,

‘எழுவாய் உருபு திரிபுஇல் பெயரே’                                  - ந 295

என்பதனாலும், நேமிநாதநூலார்,

‘பெயர் எழுவாய் வேற்றுமையாம்,                               - நே. சொ. 17

என்பதனாலும், பிரயோகவிவேகநூலார்,

‘தேற்றுந் தமிழுக்கு எழுவாய் வேற்றமை திரிபில் பெயர்’

என்பதனாலும் குறிப்பிட்டுள்ளனர். இலக்கண விளக்கமும் நன்னூல் நுதலியதனையே நுதலிற்று.