பக்கம் எண் :

 வேற்றுமையில் - நூற்பா எண். 34, 35167

கண்ணிற்குக் காணலாம் - நான்காவது;

கண்ணிற் காணலாம் - ஐந்தாவது;

கண்ணது காட்சி - ஆறாவது;

- என முறையே காண்க.

[வி-ரை: இவ்வெடுத்துக்காட்டுக்கள் கண்ணால் என்பதனை நிலைமொழியாகக் கொள்ளினும் அமையுமாறு நோக்கிக் கருவிக் கண் ஏனைய உருபுகள் வருமாறு உணரப்படும்.] 34

கொள்வோன்கண் பலஉருபு வருதல்

47+எல்லா உருபொடும் கொள்வோன் எழுமே.

எ-டு:

‘இரப்பவர் என்பெறினும் கொள்வர்’ -                                 -முதல்;

‘செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்’.-(கு. 167)                  -இரண்டாவது

நாகரால் பலி - மூன்றாவது;

நாகர்க்குப் பலி - நான்காவது;

நாகரின் அன்பு செய்தான் - ஐந்தாவது;

நாகரது பலி - ஆறாவது;

நாகர்கண் அன்பு செய்தான் - ஏழாவது;

- என முறையே வரும்.

[வி-ரை: இரப்பவர் நான்காவதற்குரிய கோடற்றொழிலை ஏற்றலானும், தவ்வைக்குக் காட்டிவிடும் என இரண்டாவது நான்காவதாதலானும், நாகர்க்குப் பலி என மூன்றாவதும் ஆறாவதும் நான்காவது ஆதலானும், நாகர்க்கு அன்பு செய்தான் என ஐந்தாவதும் ஏழாவதும் நான்காவது ஆதலானும் நான்காவதன் பொருட்கண் ஏனைய உருபுகளும் வருமாறு உணரப்படும்.] 35


+ நன்னூல் 317. முனிவர் உரை