பாங்கி ஊடல் தீர்த்தாள் - பிறர்க்குப் பயன். தலைவி தலைவனுக்குச் சோறு அட்டாள்; தலைவன் தலைவியைப் புணர்ந்தான் - தனக்கும் பிறர்க்கும் பயன். பயனில் சொல் பாராட்டினான்; கையை வீசினான்; கண்ணை இமைத்தான் - தனக்கும் பிறர்க்கும் பயன் சார்பில; -என முறையே சிற்றறிவோர் வினை நான்கும் காண்க. யான் எனது என்னும் செருக்கு அறுத்தான். அவாவை விட்டான்; பிறவியை ஒழித்தான். வீட்டை அடைந்தான் - தனக்குப் பயன். நூலைப் பாடினான். உரையை எழுதினான். மாணாக்கனை அறிவித்தான் - பிறர்க்குப் பயன். வேதாகம வழி விரும்பி ஒழுகினான். இரக்கத்தொடு பலி இரக்கத் தொடுத்தான். அரனது விழாவை மிக அலங்கரித்தான். சிவனது பூசையை மிகச் சிறப்பித்தான் - இருவருக்கும் பயன். அறம்பொருள் இன்பம் அளவின்றித் தேடினான். அட்டமா சித்தியை அருமையாய்த் தேடினான் - இருவருக்கும் பயனில. - என முறையே பேரறிவோர்வினை நான்கும் காண்க. |