| வினையியல் - நூற்பா எண். 19 | 231 |
உண்பான் வந்தான். ஓதுவான் போயினான். - இவை வினைமுற்றுப் பெயர் வினையெச்சமானது. [வி-ரை: வினைமுற்றுப்பெயர் ஈரெச்சமாதல் பிரயோக விவேக நூலார்க்கு உடன்பாடன்று போலும்.] 5 | வினைமுற்றுப்பெயர் ஈறுஇகர மாதல் |
எ-டு: இவன் மானேந்தி. இவன் பிறைசூடி, இவன் கங்கையாடி. - இவை ஏந்தினான், சூடினான், ஆடினான் என்னும் வினைமுற்றுப் பெயர் ஈறுஇகரமானது. [வி-ரை: ‘‘மானேந்தி, பிறைசூடி, அம்பலத்தாடி, குடக் கூத்தாடி, நூலோதி, சடாதாரி, வேடதாரி, சோமயாசி - இவை உயர்திணைக்கண் இகரம் சேர்ந்து இறுதலாகிய வினைமுற்றுப் பெயர். சேர்ந்தாரைக் கொல்லி, நூற்றுவரைக் கொல்லி, ஞாயிறுகாணி - இவை அஃறிணைக்கண் இகரம் சேர்ந்து இறுதலாகிய வினைமுற்றுப் பெயர்’’ பிரயோகவிவேகம் 37 உரை.] 6 | அவ்வீறு இகர மாயவை, வினைமுதல் செயப்படு பொருளொடு கருவி இடம்வினை யெச்சமாய் இயங்குதல்,
|
எ-டு: மண்ணுணி வெண்ணெய் உண்டான். புழுதிஉணி கடித்தது. ஞாயிறுகாணி எரித்தது. - இவை வினைமுதல். |