பக்கம் எண் :

232இலக்கணக் கொத்து 

ஊருணி, பேயாடி.

- இவை செயப்படுபொருள்-

இவ்விளக்குக் கண்காட்டி.

இத்தகடு பேயோட்டி.

இச்சகடு தேரோட்டி.

- இவை கருவி,

இப்பானை நாழி பொங்கி.

இம்மரக்கால் குறுணி கொள்ளி

- இவை இடம்

அம்பலத்தாடி வந்தான்.

மயிலேறி நீங்கினான்.

வேலேந்தி வெகுண்டான்.

நூலோதி நுவன்றான்.

- இவை வினையெச்சம்.

இவை ஈறுஇகரமாயவை வினைமுதல் ஆதியாக முறையே காண்க.

[வி-ரை: புழுதிஉணி - ஒருவிடப் பூச்சி; ஞாயிறுகாணி - சூரியகாந்தக்கல். மண்ணுணி - திருமால். ஊருணி - ஊராரால் உண்ணப்படுவது. பேயாடி - பேயால் ஆட்டப்படுபவன், ‘‘மண்ணுணி, ஊருணி இவை முறையே கருத்தாவினும் கருமத்தினும் இகரம் சேர்ந்து இறும் வினைமுற்றுப்பெயர்’’. பி. வி. 37 உரை]

வினைமுற்றுப் பெயர் இன்னும் பலவாம்என விளம்புவரே

‘இன்னும் பல’ என்றதனால்,

‘தாம் வீழ்வார்’ (கு. 1103) - தம்மால் வீழ்ப்படுவார்;

‘யாம் வீழ்வார், - எம்மால் விரும்பப்படுவார்;