பக்கம் எண் :

288இலக்கணக் கொத்து 

7. இனி, பதத்தோடு விகுதி முதலிய பொருந்தும் பொருத்தமில் புணர்ச்சி வருமாறு:

கொடிச்சேவலான், செய்த வேள்வியன், கொண்டபகைவன், உடை மாவுரியான் - இவைபோல்வன எல்லாம் சேவற் கொடியான், வேள்வி செய்தவன், பகை கொண்டவன், மரவுரியுடையான் என்று விகுதி பொருந்தலே முறை என்க.

‘செல்வத்துள் எல்லாம் தலை’                                     - கு. 411

‘நடுவூருள் நச்சுமரம்’                                           - கு. 1008

இவை போல்வன எல்லாம், செல்வம் எல்லாவற்றுள் - ஊர் நடுவுள் என்று உருபு பொருந்தலே முறை என்க.

‘புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே’                     - தொ. எ. 35

‘சாத்தன் வருதற்கு உரியனும் ஆவன்’

இவைபோல்வன எல்லாம் புணரியல் நிலையிடையும் குறுகல் உரித்து, சாத்தன் வருதற்கும் உரியனாவன் என்று உம்மை பொருந்தலே முறை என்க.

‘முதல்’ என்றதனால், ஒன்றினை உணர்ந்தான் - இரண்டினை இழந்தான் - இவை போல்வன எல்லாம் அன்சாரியை பெறுதலே முறை என்க.

[வி-ரை: ‘‘தூரான்வயச் சொல்லாவது - ஆற்றொழுக்கும் அடிமறிமாற்றும் அல்லாத ‘சுரையாழ அம்மி மிதப்ப’ ‘நல்ல படாஅ பறை’ - (கு. 1115) முதலிய எழுவகைப் பொருள்கோள் இலக்கணம் பெற்ற செய்யுட்கள்.

மரூஉத் தொகையாவது - முன்மாலை, பின்மாலை, அரைக்காசு என்பன.

கட்டிய சொல்லாவது - முயற்கோடு, கூர்மரோம கம்பலம், காதல ரோமபாசம், துன்னுசிக்குடர் என்ப.