பக்கம் எண் :

166இலக்கணக் கொத்து 

ஆகலானும் வருவார் அவராகலானும், செய்வாரும் கிளவியும் உருபும் வருவாரும் வினைமுதற் பொருளுடையவாதல் உணரப்படும்.] 32

செயப்படுபொருட்கண் பலஉருபு வருதல்

45+எல்லா உருபொடும் செயப்படு பொருள்எழும்.

எ-டு:

சோறு அடப்பட்டது - முதலாவது;

சோற்றை அட்டான் - இரண்டாவது;

அரிசியால் சோறாக்கினான் மூன்றாவது;

அவட்குக் கொள்ளும் இவ்வணிகலம் - நான்காவது;

பழியின் அஞ்சும் - ஐந்தாவது;

நூலது குற்றங் கூறினான் - ஆறாவது;

தூணின்கட் சார்ந்தான் - ஏழாவது;

- என முறையே காண்க.

[வி-ரை: சோறு அடப்பட்டது என்பது தெரிநிலைச் செயப்படுபொருளாம். அரிசியைச் சோறாக்கினான், அவளைக் கொள்ளும் இவ்வணிகலம், பழியை அஞ்சும், நூலைக்குற்றம் கூறினான், தூணைச் சார்ந்தான் என ஏனையவற்றிற்கு இரண்டன் உருபு புணர்த்து அவை செயப்படுபொருளாதல் கண்டு செயப்படுபொருள் எல்லா உருபொடும் வருமாறு உணரப்படும்.] 33
எ-டு:

கருவிக்கண் பல உருபு வருதல்

46*ஒன்று மூன்றுநான்கு ஐந்துஆறு உருபொடு
கருவி வரும்எனக் கருதினர் புலவர்.

கண்காணும் - முதல்;

கண்ணாற் காண்பன் - மூன்றாவது;


+ நன்னூல்317. முனிவர் உரை.

* நன்னூல்317. முனிவர் உரை.