‘தத்-அபாவம் தத்-அந்நியம் தத்-விருத்தம் என மூன்று ஆகும் நஞ்ஞு தற்புருடன்.’ இஃது உரைச்சூத்திரம். இனி, பாணினி பகவான் இவ்வுதாரணங்கட்கு முன் நின்ற நகாரம் கெட்டு வெறொரு நகாரம் வந்தது என்பர். தமிழினும், ‘இல்பொருள் உவமை’ - இது இயற்கையான தத்-அபாவத்தில் வந்து நஞ்ஞு. ‘வேற்றுமை அல்வழி’ - தொ. எ. 158 ‘அஃறிணை’ - தொ. சொ. 1 என்பன தத்-அந்நியமான இனத்தில் வந்த நஞ்ஞு. ‘பயனில்சொல் பாராட்டல்’ - கு. 196 ‘கோளில் பொறி’ - கு. 9 இவை உண்மைக்கு எதிர்மறையான தத்-விருத்தத்தில் வந்த நஞ்ஞு. ‘கருமம் அல்லாச் சார்பு என் கிளவி்’ - தொ. சொ. 84 இஃது இன்மைப் பொருளில் வந்த அன்மை. ‘மன்னாப் பொருளும் அன்ன இயற்றே’ தொ. சொ. 34 ‘பிறவாழி நீந்தல் அரிது’ - கு. 8 ‘புறத்த புகழும் இல’ - கு. 39 என்புழி முறையே தத்-அபாவமும், தத்-அந்நியமும், தத்-விருத்தமுமான நஞ்ஞு இனி, இல்பொருள், இல்லாப் பொருள், ‘இரப்பாரை இல்லாத ஈர்ங்கண்மா ஞாலம்’ (கு. 1058) ‘ஏமாப்பில் தோணி’ (கு. 1068) என அடையடுத்துத் தொகை மொழியாய் நிற்கும் என்க’’ பிரயோக விவேகம் 21உரை.] 15 |